Newsகறுப்பாக இருந்ததால் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் - வெளியான...

கறுப்பாக இருந்ததால் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் – வெளியான அதிர்ச்சி சம்பவம்!

-

கறுப்பாக இருந்த காரணத்தால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ள சம்பவம் கர்நாடகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜுவர்கியின், கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காஜா படேல்(32), யாத்கிரி மாவட்டம் ஷாஹாபூர் தாலுக்காவைச் சேர்ந்த பர்சானா பேகம்(28) என்பவரை கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தம்பதியருக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கறுப்பாக இருந்த காரணத்தால் தன் மனைவியை அவ்வப்போது திட்டி தீர்த்துள்ளார். உன் முகத்துக்கு எவ்வளவு பவுடர் போட்டாலும், ஹீரோயினியாக மாட்டாய் எனக் கிண்டல் அடித்துள்ளார். 

ஒருகட்டத்தில் மனைவியை திட்டி சித்ரவதையும் செய்ததோடு, வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியுள்ளார். இந்த விஷயத்தை பர்ஜானா தன் பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன், பர்ஜானா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை, பால் வியாபாரி ஒருவர் பர்ஜானா குடும்பத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸாருடன் வந்த பர்ஜானாவின் பெற்றோர் குழந்தைகளை மீட்டு உடன் அழைத்துச் சென்றுள்ளனர். காஜா படேல் தனது குடும்பத்தோடு தப்பியோடியுள்ளார்.

மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

அத்துடன், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் அதிகரித்துவரும் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவல்

இந்த ஆண்டு விக்டோரியாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. விக்டோரியாவின் வடகிழக்கில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் இருந்து பறவைக் காய்ச்சலின் மூன்றாவது வழக்கு பதிவானதைத்...

ஆஸ்திரேலியாவில் போக்கர் இயந்திரத்தால் 8 பில்லியன் டாலர்கள் இழப்பு

சூதாட்டத்தால் மக்கள் அதிக அளவில் பணத்தை இழக்கும் சூழ்நிலை ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் மதுபானம் மற்றும் கேமிங் தரவுகள், அந்த மாநிலத்தில்...

விக்டோரியாவில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்குவதில் காவல்துறை கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் காவல்துறைத் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து தனது பதவியை...

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட இந்திய அரசியல்வாதி

இந்தியாவில் ஒரு அரசியல்வாதியை கிரிக்கெட் மட்டையால் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. முகமூடி அணிந்த ஒரு குழு, காங்கிரஸ் எம்.பி. ரீ ரகிபுல் உசேன்...

மெல்பேர்ண் பள்ளிக்கு எழுந்துள்ள AI நெருக்கடி

மெல்பேர்ண் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் ஆபாசப் படங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளன. கிளாட்ஸ்டோன் பார்க் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பல மாணவிகளின் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தைப்...

ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனத்திற்கு மில்லியன் டாலர்கள் அபராதம்

ஆஸ்திரேலிய சூப்பர் பைனான்சியல் நிறுவனத்திற்கு $27 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Australian Super Fund ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி நிறுவனமாகும். மேலும் இது உலகின் 16வது...