Newsலோகோவை மாற்றியது NOKIA நிறுவனம்

லோகோவை மாற்றியது NOKIA நிறுவனம்

-

நோக்கியா நிறுவனத்தின் 60 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தனது அடையாளத்தை மாற்ற முடிவு செய்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து நோக்கியாவின் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டெலிகாம் உபகரணங்கள் உற்பத்தியாளர் பிரிவில் தொடர் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில், நோக்கியா இந்த முடிவை எடுத்துள்ளது.

புதிய லோகோ ஐந்து வெவ்வேறு வடிவங்கள் இணைந்து நோக்கியா எனும் வார்த்தையை பிரதிபலிக்கிறது. பாரம்பரியம் மிக்க புளூ நிற பழைய லோகோவுக்கு மாற்றாக புதிய லோகோவில் தேவைக்கு ஏற்ப அதிக நிறங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

“ஸ்மார்ட்போன்களிடம் அதிக ஒருங்கிணைப்பு இருந்து வந்தது, எனினும், தற்போதைய காலக்கட்டத்தில் நாங்கள் வியாபார தொழில்நுட்ப நிறுவனம்,” என தலைமை அதிகாரி பெக்கா லுண்ட்மார்க் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

2020 ஆண்டு வாக்கில் தடுமாற்றத்தில் இருந்துவந்த நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட லுண்ட்மார்க் ரிசெட், அக்செல்லரேட் மற்றும் ஸ்கேல் என மூன்று நிலைகள் அடங்கிய வியூகத்தை வகுத்து நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.

இவற்றில் ரிசெட் நிலை முடிவுக்கு வருவதை அடுத்து, இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பித்து இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். தற்போது சேவை வழங்கும் வியாபார பிரிவில் டெலிகாம் நிறுவனங்களுக்கு உபகரணங்களை விநியோகம் செய்து வரும் நோக்கியா, தொடர்ந்து வியாபாரங்களுக்கு உபகரணங்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

Latest news

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயார்!

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருகிறார். சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற சவாலைத் தொடங்க...

ஆஸ்திரேலியாவின் அரச திருமணம் நவம்பரில் நடக்குமா?

ஆஸ்திரேலியாவின் "அரச திருமணத்திற்கான" கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஜோடி ஹேடன் ஆகியோர் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாக...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய விக்டோரியா மேயர்

விக்டோரியாவின் Macedon Ranges மேயர் டொமினிக் போனன்னோ, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 31 ஆம் திகதி மெல்பேர்ணில் உள்ள McGeorge சாலையில் அவர்...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

விக்டோரியாவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 8 வயது சிறுவன்

விக்டோரியாவின் கீல்லாவில் உள்ள ஒரு Display house-இல் உள்ள குளத்தில் மூழ்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். Shepparton அருகே உள்ள GJ Gardiner வீட்டில் உள்ள...