Newsஅமெரிக்க ஜனாதிபதி - அவுஸ்திரேலிய பிரதமர் இடையே விரைவில் முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க ஜனாதிபதி – அவுஸ்திரேலிய பிரதமர் இடையே விரைவில் முக்கிய பேச்சுவார்த்தை

-

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் 5 நாள் பயணமாக இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். 

இந்த விஜயத்திற்கு பிறகு, ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க இருப்பதாவும், அதற்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா புறப்படுவதற்கு முன் ஊடகவியலாளர்களிடம், ‘அமெரிக்க நிர்வாகத்துடன் நான் வைத்திருக்கும் தொடர்ச்சியான ஈடுபாட்டை எதிர்நோக்குகிறேன். நடக்கும் ஏற்பாடுகளின் விவரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,’ என்று அமெரிக்க பயணத்திற்கான திகதியை குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார். 

அல்பானீஸ் அடுத்த வாரம் தனது அமெரிக்க விஜயத்தின் போது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...

ஆஸ்திரேலியாவில் சமீபத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 4 சட்டவிரோத மருந்துகள்

புதிய கழிவு நீர் சோதனைகளின்படி, ஆஸ்திரேலியாவில் நான்கு சட்டவிரோத மருந்துகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையத்தின் (ACIC) சமீபத்திய அறிக்கை, ஆகஸ்ட் 2023...

ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி

ஆஸ்திரேலிய அரசாங்கம் மின்சார வாகன (EV) உரிமையாளர்கள் மீது சாலை பயனர் கட்டணம் விதிக்க ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறது. தனியார் வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் எரிபொருள்...

இரவு நேர விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ள விமான நிறுவனம்

தொழில்துறை நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் இரவு நேர விமானங்கள் பலவற்றை ரத்து செய்வதாக Air Canada தெரிவித்துள்ளது. கனடாவிலிருந்து நேற்று புறப்படவிருந்த பல நீண்ட தூர சர்வதேச...

சமூக ஊடகங்களில் துப்பாக்கிச் சூடு மிரட்டல் – WA பள்ளியை முற்றுகையிட்ட போலீசார்

சமூக ஊடகங்களில் துப்பாக்கிச் சூடு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, பெர்த்தின் மிகப்பெரிய உயர்நிலைப் பள்ளிகளில் ஒன்றை நேற்று போலீசார் முற்றுகையிட்டனர். Mount Lawley Senior உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஒரு டீனேஜரால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ...

திடீரென விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானம் – பீதியடைந்த பயணிகள்

சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் செல்லும் விர்ஜின் ஆஸ்திரேலியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கேபினில் அழுத்தம் குறைந்ததால், பயணிகள் பீதியடைந்ததாக நேற்று ஒரு செய்தி வெளியானது. ஸ்கைநியூஸ்...