Newsஅமெரிக்க ஜனாதிபதி - அவுஸ்திரேலிய பிரதமர் இடையே விரைவில் முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க ஜனாதிபதி – அவுஸ்திரேலிய பிரதமர் இடையே விரைவில் முக்கிய பேச்சுவார்த்தை

-

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் 5 நாள் பயணமாக இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். 

இந்த விஜயத்திற்கு பிறகு, ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க இருப்பதாவும், அதற்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா புறப்படுவதற்கு முன் ஊடகவியலாளர்களிடம், ‘அமெரிக்க நிர்வாகத்துடன் நான் வைத்திருக்கும் தொடர்ச்சியான ஈடுபாட்டை எதிர்நோக்குகிறேன். நடக்கும் ஏற்பாடுகளின் விவரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,’ என்று அமெரிக்க பயணத்திற்கான திகதியை குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார். 

அல்பானீஸ் அடுத்த வாரம் தனது அமெரிக்க விஜயத்தின் போது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

ADHD சிகிச்சையை எளிதாக்க விக்டோரிய அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் ADHD (கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு) நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதை எளிதாக்குவதற்காக விக்டோரியன் அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

Bondi பயங்கரவாத சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் கருத்து

மெல்பேர்ண் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள Bondi பயங்கரவாதி நவீத் அக்ரமின் சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் Nick Reece கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பயங்கரவாதியை ஊக்குவிப்பதற்காகவோ...