Newsஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

-

இந்தோனேசியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. 

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர் அளவுக்கு சாம்பல் புகையை வெளியேற்றியதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் , 2,968 மீட்டர் (9,721 அடி )உயரமுள்ள மெராபி எரிமலை, நள்ளிரவு வெடித்துச் சிதறியது. 

இதனைத்தொடர்ந்து அப்பகுதி கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிலிருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு பரவும் எனவும், தீக்குழம்பும் வெளியேறி, சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு வழிந்தோடும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது. 

எரிமலையில் இருந்து வெளிவரும் சாம்பல், அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...