Newsதன்னை பற்றி கூகுளில் தேடியவருக்கு மரண தண்டனை விதித்த கிம் ஜோங்...

தன்னை பற்றி கூகுளில் தேடியவருக்கு மரண தண்டனை விதித்த கிம் ஜோங் உன்

-

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உனின் தந்தை கிம் ஜோங்–2 மறைவுக்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து  புதிய ஜனாதிபதியா  பொறுப்பு ஏற்று, அவரின் தந்தை போன்றே இவரும் கம்யூனிச அரசை நிர்வகித்து வருகிறார்.

அதனால் தன்னை எதிர்ப்பவர்களையும், அரசுக்கு எதிராக சதி செய்பவர்களையும் தண்டிக்கும் வகையில் மரணத் தண்டனை விதித்து வருகிறார்.

கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடையுள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.

ஜனாதிபதியாக  கிம் ஜோங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், ‘பியூரோ 10’ என்றழைக்கப்படும், அந்த நாட்டின் உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ‘கூகுள்’ இணையதளத்தில் சமீபத்தில், ஜனாதிபதி கிம் ஜோங் உன் குறித்த தகவல்களை விவரமாக தேடிய நிலையில், இதனை எப்படியோ அறிந்து கொண்ட கிம் ஜோங் உன் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கியால் சுடும் படைப் பிரிவினரால், அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இது, அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மரணத் தண்டனைக்கு எதிராகக் குரல் எழுந்து வரும் நிலையில், வடகொரிய ஜனாதிபதி மரணத் தண்டனை விதிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஜூலை 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்

ஆஸ்திரேலியர்கள் தங்கள் பணத்தைச் சேமித்துச் செலவிடும் விதத்தில் பரவலான மாற்றங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றன. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் பொதுவாக புதிய நிதியாண்டை...

சில்லறை எரிசக்தி சந்தையில் புதிய விதிகளை அறிவித்த AEMC

நாட்டின் சில்லறை எரிசக்தி சந்தையில் ஒரு பெரிய மாற்றமாக, மின்சார சில்லறை விற்பனையாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை நுகர்வோர் விலைகளை உயர்த்துவதற்கு மட்டுமே வரம்பிடப்படுவார்கள். ஆஸ்திரேலிய எரிசக்தி...

வேலை விசாக்களை வைத்திருக்க கருக்கலைப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள்

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பெண்கள் தங்கள் விசா நிபந்தனைகளை மீறுவதைத் தவிர்ப்பதற்காக தன்னிடம் கருக்கலைப்பு செய்ய முயல்வதாக ஒரு மகப்பேறு மருத்துவர் நாடாளுமன்ற விசாரணையில்...

கஞ்சா பயன்பாடு இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கும்

கஞ்சா பயன்பாடு இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. 19 முதல் 59 வயதுக்குட்பட்ட 200 மில்லியன் மக்களிடமிருந்து தரவுகளை...

796 குழந்தைகளின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்!

அயர்லாந்தில் 796 குழந்தைகளின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகள் 2014 ஆம் ஆண்டு அயர்லாந்தின் Tuam...

ஆஸ்திரேலியாவின் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம் எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக மேற்கு ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை அதிகாரப்பூர்வமாக 3 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, கடந்த ஆண்டு இந்த...