Newsதன்னை பற்றி கூகுளில் தேடியவருக்கு மரண தண்டனை விதித்த கிம் ஜோங்...

தன்னை பற்றி கூகுளில் தேடியவருக்கு மரண தண்டனை விதித்த கிம் ஜோங் உன்

-

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உனின் தந்தை கிம் ஜோங்–2 மறைவுக்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து  புதிய ஜனாதிபதியா  பொறுப்பு ஏற்று, அவரின் தந்தை போன்றே இவரும் கம்யூனிச அரசை நிர்வகித்து வருகிறார்.

அதனால் தன்னை எதிர்ப்பவர்களையும், அரசுக்கு எதிராக சதி செய்பவர்களையும் தண்டிக்கும் வகையில் மரணத் தண்டனை விதித்து வருகிறார்.

கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடையுள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.

ஜனாதிபதியாக  கிம் ஜோங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், ‘பியூரோ 10’ என்றழைக்கப்படும், அந்த நாட்டின் உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ‘கூகுள்’ இணையதளத்தில் சமீபத்தில், ஜனாதிபதி கிம் ஜோங் உன் குறித்த தகவல்களை விவரமாக தேடிய நிலையில், இதனை எப்படியோ அறிந்து கொண்ட கிம் ஜோங் உன் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கியால் சுடும் படைப் பிரிவினரால், அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இது, அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மரணத் தண்டனைக்கு எதிராகக் குரல் எழுந்து வரும் நிலையில், வடகொரிய ஜனாதிபதி மரணத் தண்டனை விதிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...