Newsஇறைச்சி, கடல் உணவு மற்றும் மதுபானங்கள் வாங்குவதை குறைத்துள்ள ஆஸ்திரேலியர்கள்

இறைச்சி, கடல் உணவு மற்றும் மதுபானங்கள் வாங்குவதை குறைத்துள்ள ஆஸ்திரேலியர்கள்

-

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக ஆஸ்திரேலியர்கள் இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் மதுபானங்களை வாங்குவதை கணிசமாகக் குறைத்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

Finder இன்ஸ்டிட்யூட் நடத்திய இந்த ஆய்வில், கடந்த 12 மாதங்களில் இந்த நாட்டில் வாழும் 04 பேரில் ஒருவர் தங்களது உணவு முறைகளை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 47 சதவீதம் பேர் துரித உணவு அல்லது  take away உணவுகளை குறைத்துள்ளனர் மற்றும் சுமார் 35 சதவீதம் பேர் இறைச்சி அல்லது கடல் உணவுகளை உட்கொள்வதை குறைத்துள்ளனர்.

மது பாவனையை குறைத்த வீதம் 32 வீதமாக பதிவாகியுள்ளது.

புள்ளிவிபரப் பணியகத்தின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இறைச்சி மற்றும் கடல் உணவுகளின் விலைகள் 2022 இல் 08 வீதத்தாலும், பால் பொருட்களின் விலைகள் 15 வீதத்தாலும் அதிகரித்துள்ளன.

அதன்படி ஆஸ்திரேலியர்களின் ஒரு வாரத்திற்கான உணவுச் செலவும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த பிப்ரவரியில் 37 டாலர்கள் அதிகரித்து 185 டாலர்களை எட்டியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...