Newsகரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை

கரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை

-

அமெரிக்காவில், “கருப்பு கரடியை கட்டிப்பிடித்து பராமரிக்க ஆட்கள் தேவை” என, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியு மெக்சிகோ மாகாணத்தில் உள்ள வன விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் கருப்புக் கரடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பனிப் பிரதேசத்தில் வாழக்கூடிய இவற்றை பராமரிக்க ஆட்கள் தேவை என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்கை வளப் பாதுகாப்பு, உயிரியல் அறிவியல் அல்லது அதைப் போன்ற படிப்புகளில் அனுபவம் அல்லது கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.

கடினமான சூழ்நிலைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும். கரடிக் குட்டிகளை கட்டிப்பிடித்தபடி குகைக்குள் ஊர்ந்து செல்லக்கூடிய தைரியம் இருத்தல் அவசியம். நேர்மறையான அணுகுமுறை, வலுவான பணி நெறிமுறை மற்றும் நியூ மெக்சிகோ முழுதும் தொலைதூர இடங்களில் சாகச உணர்வுடன் பணியாற்றும் திறன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...