Newsகரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை

கரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை

-

அமெரிக்காவில், “கருப்பு கரடியை கட்டிப்பிடித்து பராமரிக்க ஆட்கள் தேவை” என, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியு மெக்சிகோ மாகாணத்தில் உள்ள வன விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் கருப்புக் கரடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பனிப் பிரதேசத்தில் வாழக்கூடிய இவற்றை பராமரிக்க ஆட்கள் தேவை என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்கை வளப் பாதுகாப்பு, உயிரியல் அறிவியல் அல்லது அதைப் போன்ற படிப்புகளில் அனுபவம் அல்லது கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.

கடினமான சூழ்நிலைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும். கரடிக் குட்டிகளை கட்டிப்பிடித்தபடி குகைக்குள் ஊர்ந்து செல்லக்கூடிய தைரியம் இருத்தல் அவசியம். நேர்மறையான அணுகுமுறை, வலுவான பணி நெறிமுறை மற்றும் நியூ மெக்சிகோ முழுதும் தொலைதூர இடங்களில் சாகச உணர்வுடன் பணியாற்றும் திறன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

இளம் வயதிலேயே தொழில்முனைவோராக மாறிய ஆஸ்திரேலிய குழந்தைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்திலிருந்து, பெரியவர்களை விட பண மேலாண்மை பற்றி தெளிவாகப் பேசும் குழந்தைகள் குழுவைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. 6 ஆம் வகுப்பு படிக்கும் இந்தத்...

மின்சார பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடி மீது 130 குற்றச்சாட்டுகள்

தள்ளுபடி விலை கடையான Panda Mart மீது மின் பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக 130 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன . Energy Safe Victoria கூறுகையில், மார்ச் 2025...

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல்...

ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களின் ஒரு குழுவை பாதிக்கும் UK பாஸ்போர்ட் சட்டம்

புதிய பிரிட்டிஷ்-ஐரிஷ் பாஸ்போர்ட் சட்டங்களால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள் பெப்ரவரி 25 முதல் அமல்படுத்தவுள்ள புதிய பாஸ்போர்ட் விதிகள் காரணமாக...

ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களின் ஒரு குழுவை பாதிக்கும் UK பாஸ்போர்ட் சட்டம்

புதிய பிரிட்டிஷ்-ஐரிஷ் பாஸ்போர்ட் சட்டங்களால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள் பெப்ரவரி 25 முதல் அமல்படுத்தவுள்ள புதிய பாஸ்போர்ட் விதிகள் காரணமாக...

விக்டோரியாவின் காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதத்தை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

விக்டோரியா மாநிலத்தில் காட்டுத்தீயால் அழிக்கப்பட்ட நகரங்களின் செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் 290க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தப்...