Newsகரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை

கரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை

-

அமெரிக்காவில், “கருப்பு கரடியை கட்டிப்பிடித்து பராமரிக்க ஆட்கள் தேவை” என, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியு மெக்சிகோ மாகாணத்தில் உள்ள வன விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் கருப்புக் கரடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பனிப் பிரதேசத்தில் வாழக்கூடிய இவற்றை பராமரிக்க ஆட்கள் தேவை என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்கை வளப் பாதுகாப்பு, உயிரியல் அறிவியல் அல்லது அதைப் போன்ற படிப்புகளில் அனுபவம் அல்லது கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.

கடினமான சூழ்நிலைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும். கரடிக் குட்டிகளை கட்டிப்பிடித்தபடி குகைக்குள் ஊர்ந்து செல்லக்கூடிய தைரியம் இருத்தல் அவசியம். நேர்மறையான அணுகுமுறை, வலுவான பணி நெறிமுறை மற்றும் நியூ மெக்சிகோ முழுதும் தொலைதூர இடங்களில் சாகச உணர்வுடன் பணியாற்றும் திறன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...