Sportsஒருநாள் உலகக் கிண்ணத்தை இந்த அணிதான் வெல்லும் - பிரெட் லீ...

ஒருநாள் உலகக் கிண்ணத்தை இந்த அணிதான் வெல்லும் – பிரெட் லீ கருத்து

-

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கிண்ண தொடரானது நடைபெறவுள்ளது.

இந்த உலகக் கிண்ணத்தை வெல்வதற்காக தற்போது அனைத்து அணிகளும் முழுஅளவில் தயாராகி வருகின்றன.

13-வது முறையாக நடைபெறவுள்ள இந்த 50 ஓவர் உலகக் கிண்ணத்தை அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி-யின் 50 உலகக் கிண்ண தொடரானது நடைபெற்றது.

அதில் 2011-ஆம் ஆண்டு தோனியின் தலைமையிலான இந்திய அணி கிண்ணத்தை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பல ஐசிசி தொடர்களை இந்திய அணி இழந்த வேளையில் தற்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்காக முனைப்பு காட்டி வருகின்றது.

மேலும் இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இந்த அனைத்து தொடர்களிலும் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கணிப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகக் கிண்ணத்தை இந்திய அணிதான் வெல்லும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிரட் லீ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கிண்ணத்தை கைப்பற்ற இந்திய அணிக்கு தான் வாய்ப்பு அதிகம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தற்போது மிகச் சிறப்பான அணியாக உள்ளது. அந்த அணியில் அனுபவமும் இளமையும் கலந்துள்ளது. அதுமட்டும் இன்றி இந்திய மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது சவாலான காரியம்.

இங்குள்ள மைதானங்கள் அனைத்தும் இந்திய அணிக்கு ரொம்பவே பழக்கப்பட்டவை என்பதனால் இந்திய அணிக்கு இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்பு என்று எந்தவித தயக்கமும் இன்றி பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...