Newsஜப்பானில் வேகமாக பரவி வரும் பறவைக்காய்ச்சல்

ஜப்பானில் வேகமாக பரவி வரும் பறவைக்காய்ச்சல்

-

ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன. 

மேலும் அதனை சுற்றிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகளில் கோழிகள் மற்றும் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பறவைக்காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள கோழிகளை பாதுகாப்பதற்காக இந்த பண்ணையில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

ஜப்பானில் கடந்த சில மாதங்களாக பறவைக்காய்ச்சல் தீவிரமடைந்து வருவதும், இதன் காரணமாக லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் வரவிருக்கும் அவசர சிகிச்சை மருத்துவமனைகள்

நாடு முழுவதும் மேலும் 50 அவசர சிகிச்சை மருத்துவமனைகளை நிறுவுவதாக ஆளும் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. இது மருத்துவ செலவினங்களை $8.5 பில்லியனாக அதிகரிப்பதாக...

விக்டோரியாவில் அல்பானீஸ் அரசாங்கத்தின் வாக்குப் பங்கு சரியும் அறிகுறி

விக்டோரியா மாநிலத்தில் தொழிலாளர் கட்சி 8 இடங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Ledbridge Accent தரவு அறிக்கைகளின்படி, அல்பானீஸ் அரசாங்கம் இரு கட்சி...

மெல்பேர்ணின் முக்கிய சாலைகளில் தொடரும் போலீஸ் நடவடிக்கைகள்

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய சாலையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ண் காவல்துறை நேற்றும் நேற்று முன்தினம் பிரதான மோனாஷ் தனிவழிப்பாதையில்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...

இறந்த உடலுடன் விமானத்தில் பயணித்த ஆஸ்திரேலிய தம்பதியினர்

ஒரு ஆஸ்திரேலிய தம்பதியினர் விமானத்தில் தங்கள் பக்கத்து இருக்கையில் ஒரு இறந்த உடலை வைத்திருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய தம்பதிகளான மிஷெல் ரிங் மற்றும்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...