Newsமெட்டா நிறுவனம் தொடர்பில் பெண் ஊழியர் பகிர்ந்த அனுபவம்

மெட்டா நிறுவனம் தொடர்பில் பெண் ஊழியர் பகிர்ந்த அனுபவம்

-

மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியரான மேடலின் மசாடோ என்பவர் டிக்டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்ட செய்தியில், வேலையில் எதுவும் செய்யாமல் ஓராண்டுக்கு ரூ.1.5 கோடி என்ற அளவில் தனக்கு சம்பளம் அளிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மெட்டா நிறுவனத்தில், வேலை எதுவும் செய்யாமல் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம், என்ற தலைப்பிலான அந்த வீடியோவில், மேடலின் வேலையில் இருந்தபோதே, வேறு புதிய பணியாளர்கள் யாரையும் பணியில் சேர்க்காமல் தனது நிறுவனம் எப்படி செயல்பட்டது என்பது பற்றி அவர் விளக்கியுள்ளார்.

அவரது கூற்றுப்படி, 2021-ம் ஆண்டில் அவர் பணியில் சேர்ந்த முதல் 6 மாதங்களுக்கும், பின்னர் ஓராண்டுக்கும் யாரையும் பணியில் சேர்க்கும் திட்டம் நிறுவனத்திற்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது இந்த வீடியோவால் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. இதனை தொடர்ந்து, தனது பேச்சுக்கு அவர் வேறொரு விளக்கம் அளித்துள்ளார். 

நான் வெளியிட்ட ஒரு வீடியோ தவறான வழியில் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. மெட்டா நிறுவனத்தில் முதல் 6 மாத காலத்தில் யாரையும் பணியமர்த்தவில்லை மற்றும் எந்த வேலையும் செய்யவில்லை என நான் கூறியபோதும், வேலை எதுவும் செய்யாதபோதும் நான் கற்று கொண்டு இருந்தேன் என விளக்கம் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் 18 வருட வரலாற்றில் இல்லாத வகையில், கடந்த ஆண்டு நவம்பரில் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. எனினும், சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியானது. 

இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைப்படுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து இருக்கின்றது. 

இந்த முறை பொறியியல் அல்லாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பணியாளர்கள் முன்னிலையில் கூறும்போது, எங்களது குழுவின் அளவை குறைப்பது பற்றி நாங்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். 

அதனால், 10 ஆயிரம் பேர் குழுவில் இருந்து பணி நீக்கம் செய்யப்படலாம் என கூறியுள்ளார். பொருளாதார சரிவை ஈடுகட்டும் நோக்கில் மற்றும் பரவலாக நிறுவன மறுகட்டமைப்பு மேற்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்படுகின்றது.

இதனால், 2-வது முறையாக அதிக அளவிலான பணியாளர்களை நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் மிக பெரிய முதல் தொழில் நுட்ப நிறுவனம் என்ற பெயரை மெட்டா பெறவுள்ளது. 

இதுதவிர, 5 ஆயிரம் பேரை புதிதாக பணிக்கு அமர்த்துவதற்கான திட்ட நடவடிக்கைகளும் கைவிடப்படும் என அறிவித்துள்ளது. 

அவர்கள் இன்னும் பணிக்கு அமர்த்தப்படவில்லை. இதனால், அந்த வேலைக்கு பணியாளர்கள் வரும் முன்னரே, குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் மூடப்படவுள்ளன. 

சமீப காலங்களாக அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களும் இந்த பணி நீக்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...