Newsசமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

-

அமெரிக்க உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. 

அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. 

அதனையடுத்து அங்குள்ள உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவுக்கு கவர்னர் ஸ்பென்சர் காக்ஸ் ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை வைத்திருக்க அவர்களது பெற்றோர் அவசியம் சம்மதிக்க வேண்டும். மேலும் அவர்களது கணக்கை பெற்றோர் முழுவதும் அணுகும் வகையில் இருக்க வேண்டும். 

முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் செய்திகளை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்வேறு அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

இந்த சட்டம் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க உதவும் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...