Newsசமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

-

அமெரிக்க உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. 

அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. 

அதனையடுத்து அங்குள்ள உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவுக்கு கவர்னர் ஸ்பென்சர் காக்ஸ் ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை வைத்திருக்க அவர்களது பெற்றோர் அவசியம் சம்மதிக்க வேண்டும். மேலும் அவர்களது கணக்கை பெற்றோர் முழுவதும் அணுகும் வகையில் இருக்க வேண்டும். 

முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் செய்திகளை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்வேறு அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

இந்த சட்டம் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க உதவும் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

 மரண ஆபத்தை ஏற்படுத்தும் CellAED இயந்திரம் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் பணியிடங்களில் அவசர சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 'CellAED' வகை Defibrillatorsகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை தயாரித்த நிறுவனத்தின் சரிவு...

அடுத்த வாரம் 2 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ள Samsung

Samsung தனது சமீபத்திய Galaxy A17 5G Smartphone மற்றும் Galaxy Tab A11+ டேப்லெட்டை வரும் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் அறிமுகப்படுத்தப்போவதாக...

போதைப்பொருட்களால் உயிரை மாய்த்துக் கொண்டு உறுப்புகளை தானம் செய்த உலகின் முதல் ஆஸ்திரேலியர்

தன்னார்வ மரணத்தைத் தூண்டுவதற்காக மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு, தனது உறுப்புகளை தானம் செய்த உலகின் முதல் நபராக ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் உருவெடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. கரேன் டங்கன்...

ஆபாச படங்களை உருவாக்குவதாக Grok AI நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு

எலான் மஸ்க்கின் Grok என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய ஆடைகளை டிஜிட்டல் முறையில் அகற்றியதாக கூறி, ஒரு பெண் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார் இது...

சிட்னியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

ஆஷஸ் போட்டியின் முதல் நாளுக்கு முன்னதாக, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை ரோந்து செல்ல, அதிக ஆயுதம் ஏந்திய நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரின் ஒரு...

அரசாங்க வலைத்தளத்தை ஹேக் செய்த பிரிட்டிஷ் ஹேக்கருக்கு ஆஸ்திரேலியா வழங்கிய சிறப்பு விசா

ஒரு தனிநபர் பெறுவதற்கு மிகவும் கடினமான ஆஸ்திரேலிய விசா வகைகளில் ஒன்றை பிரிட்டிஷ் ஹேக்கர் ஒருவர் பெற முடிந்தது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இணைய அமைப்பில் ஒரு முக்கியமான...