Sportsஉலக சாம்பியன் மெஸ்ஸிக்கு உருவச் சிலை வடிவமைப்பு

உலக சாம்பியன் மெஸ்ஸிக்கு உருவச் சிலை வடிவமைப்பு

-

கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்தாட்ட உலக கிண்ணத்தை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்று கிண்ணத்தை கைப்பற்றியது.

1978, 1986-க்குப் பிறகு அர்ஜென்டினா அணி வென்ற 3-வது உலக கிண்ணம் இதுவாகும். மெஸ்ஸி முதல்முறையாக உலக கிண்ணத்தை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது.

உலக கிண்ணம் 2022 தொடரில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகின்றது.

இந்த நிலையில், உலக சாம்பியன் மெஸ்ஸிக்கு , தென் அமெரிக்க கால்பந்தாட்ட கூட்டமைப்பு சார்பில் மெஸ்ஸியின் முழு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி, கையில் உலக கிண்ணத்தை தாங்கி நிற்பது போல இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மெஸ்ஸி பங்கேற்றுள்ளார்.

மெஸ்ஸி சிலையை தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அருங்காட்சியகத்தில் கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு அருகில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...