Sportsஉலக சாம்பியன் மெஸ்ஸிக்கு உருவச் சிலை வடிவமைப்பு

உலக சாம்பியன் மெஸ்ஸிக்கு உருவச் சிலை வடிவமைப்பு

-

கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்தாட்ட உலக கிண்ணத்தை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்று கிண்ணத்தை கைப்பற்றியது.

1978, 1986-க்குப் பிறகு அர்ஜென்டினா அணி வென்ற 3-வது உலக கிண்ணம் இதுவாகும். மெஸ்ஸி முதல்முறையாக உலக கிண்ணத்தை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது.

உலக கிண்ணம் 2022 தொடரில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகின்றது.

இந்த நிலையில், உலக சாம்பியன் மெஸ்ஸிக்கு , தென் அமெரிக்க கால்பந்தாட்ட கூட்டமைப்பு சார்பில் மெஸ்ஸியின் முழு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி, கையில் உலக கிண்ணத்தை தாங்கி நிற்பது போல இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மெஸ்ஸி பங்கேற்றுள்ளார்.

மெஸ்ஸி சிலையை தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அருங்காட்சியகத்தில் கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு அருகில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

கணையப் புற்றுநோயைக் கண்டறிய புதிய இரத்தப் பரிசோதனை

ஆஸ்திரேலிய கணைய புற்றுநோய் அறக்கட்டளை (PanKind) கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான புதிய இரத்த பரிசோதனை இப்போது ஆஸ்திரேலியாவில் கிடைக்கிறது என்று அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, இந்த இரத்தப்...

ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை சர்வதேச வர்த்தக விலை குறியீடுகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. அதன்படி, கடந்த...

மனதையும் கணினியையும் இணைக்கும் ஒரு இடைமுகத்தை உருவாக்கும் Neuralink

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான அமெரிக்க நிறுவனமான Neuralink, அதன் சமீபத்திய ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை கணினியையும் மனித மூளையையும் இணைக்கக்கூடிய ஒரு...

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...