Sportsமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் - IPL...

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் – IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டி பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்றது.

இதில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

அந்த வகையில், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணியின் திலக் வர்மா 46 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 84 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காமல் ) குவித்தார். பெங்களூரு அணி சார்பில் கரண் சர்மா 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து ,172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூ பிளசிஸ் ஜோடி அதிரடியில் இறங்கியது. பந்துகள் சிக்சர், பவுண்டரிகளாக பறந்தன.

இருவரும் அரை சதமடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு விராட் கோலி, டூ பிளசிஸ் ஜோடி 148 ஓட்டங்கள் குவித்தது.

டூ பிளசிஸ் 73 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில், பெங்களூரு அணி 172 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

விராட் கோலி 49 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உட்பட82 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை கொல்லும் கொடிய பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் பள்ளிக் குழந்தைகளிடையே 'Strep A' பாக்டீரியா பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கிம்பர்லி பகுதியில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாக்டீரியா இதய...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை கொல்லும் கொடிய பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் பள்ளிக் குழந்தைகளிடையே 'Strep A' பாக்டீரியா பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கிம்பர்லி பகுதியில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாக்டீரியா இதய...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்ட கடுமையான விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான சிறப்பு விதிகளை...