Sportsராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி- IPL 2023

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி- IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மோதின. 

அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், அணித்தலைவர் ஷிகர் தவான் இருவரும் அபாரமாக துடுப்பெடுத்தாடி வலுவான அடித்தளம் அமைத்தனர். 

இந்த ஜோடி 90 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. பிரப்சிம்ரன் சிங் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பனுகா ராஜபக்ச ஒரு ஓட்டம் எடுத்திருந்த நிலையில் காயமடைந்து வெளியேறினார்.

இதையடுத்து, ஷிகர் தவானுடன் ஜிதேஷ் சர்மா இணைய, மீண்டும் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஜிதேஷ் 27 ஓட்டம் சேர்த்த நிலையில், விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த சிக்கந்தர் ரசா ஒரு ஓட்டத்திலும் ஷாருக் கான் 11 ஓட்டத்திலும் அவுட் ஆக, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டம் குவித்தது.

ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 86 ஓட்டம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

அஷ்வின், சாகல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஷிம்ரான் ஹெட்மியர் 36 ஓட்டங்கள், துருவ் ஜூரல் 32 ஓட்டங்களும், தேவ்தத் படிக்கல் 21 ஓட்டங்கள், ரியான் பராக் 20, ஜோஸ் பட்லர் 19 ஓட்டங்கள், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 11 ஓட்டங்களும் எடுத்தனர். இதில், ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் துருவ் ஆட்டமிழக்கவில்லை.

இந்நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

Latest news

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

Bondi துப்பாக்கிதாரிகள் குண்டுகளையும் வெடிக்கச் செய்தனர் – காவல்துறை

ஹனுக்காவைக் கொண்டாடும் யூதக் கூட்டத்தின் மீது Bondi துப்பாக்கிதாரிகள் பல துண்டுக் குண்டுகளை வீசியது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவை செயல்படுத்தத் தவறியதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Boxing Day போட்டிக்கு பலத்த பாதுகாப்பு

Bondi-இல் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெறும் Boxing Day Test போட்டிக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்க விக்டோரியா காவல்துறை...