Sportsராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி- IPL 2023

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி- IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மோதின. 

அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், அணித்தலைவர் ஷிகர் தவான் இருவரும் அபாரமாக துடுப்பெடுத்தாடி வலுவான அடித்தளம் அமைத்தனர். 

இந்த ஜோடி 90 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. பிரப்சிம்ரன் சிங் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பனுகா ராஜபக்ச ஒரு ஓட்டம் எடுத்திருந்த நிலையில் காயமடைந்து வெளியேறினார்.

இதையடுத்து, ஷிகர் தவானுடன் ஜிதேஷ் சர்மா இணைய, மீண்டும் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஜிதேஷ் 27 ஓட்டம் சேர்த்த நிலையில், விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த சிக்கந்தர் ரசா ஒரு ஓட்டத்திலும் ஷாருக் கான் 11 ஓட்டத்திலும் அவுட் ஆக, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டம் குவித்தது.

ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 86 ஓட்டம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

அஷ்வின், சாகல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஷிம்ரான் ஹெட்மியர் 36 ஓட்டங்கள், துருவ் ஜூரல் 32 ஓட்டங்களும், தேவ்தத் படிக்கல் 21 ஓட்டங்கள், ரியான் பராக் 20, ஜோஸ் பட்லர் 19 ஓட்டங்கள், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 11 ஓட்டங்களும் எடுத்தனர். இதில், ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் துருவ் ஆட்டமிழக்கவில்லை.

இந்நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...