Sportsராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி- IPL 2023

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி- IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மோதின. 

அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், அணித்தலைவர் ஷிகர் தவான் இருவரும் அபாரமாக துடுப்பெடுத்தாடி வலுவான அடித்தளம் அமைத்தனர். 

இந்த ஜோடி 90 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. பிரப்சிம்ரன் சிங் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பனுகா ராஜபக்ச ஒரு ஓட்டம் எடுத்திருந்த நிலையில் காயமடைந்து வெளியேறினார்.

இதையடுத்து, ஷிகர் தவானுடன் ஜிதேஷ் சர்மா இணைய, மீண்டும் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஜிதேஷ் 27 ஓட்டம் சேர்த்த நிலையில், விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த சிக்கந்தர் ரசா ஒரு ஓட்டத்திலும் ஷாருக் கான் 11 ஓட்டத்திலும் அவுட் ஆக, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டம் குவித்தது.

ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 86 ஓட்டம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

அஷ்வின், சாகல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஷிம்ரான் ஹெட்மியர் 36 ஓட்டங்கள், துருவ் ஜூரல் 32 ஓட்டங்களும், தேவ்தத் படிக்கல் 21 ஓட்டங்கள், ரியான் பராக் 20, ஜோஸ் பட்லர் 19 ஓட்டங்கள், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 11 ஓட்டங்களும் எடுத்தனர். இதில், ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் துருவ் ஆட்டமிழக்கவில்லை.

இந்நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மீது சைபர் தாக்குதல்

சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் குறியீட்டு நூலகத்தை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். செப்டம்பர் 4, 2018 நிலவரப்படி...