Sportsமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி -...

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி – IPL 2023

-

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது.

மும்பையில் நேற்று இடம்பெற்ற 12-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. ஆரம்ப ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர்.

ரோகித் சர்மா 21 ஓட்டத்தில் அவுட்டானார். இஷான் கிஷன் 31 ஓட்டத்தில் வெளியேறினார்.

கேமரூன் கிரீன் 12 ஓட்டமும், சூர்யகுமார் யாதவ் ஒரு ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர்.

திலக் வர்மா 21 ஓட்டத்தில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி தனது ஆட்டத்தை ஆரம்பித்தது.

தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், கான்வே களமிறங்கினர்.

தொடக்கத்தில் சென்னை அணியின் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரஹானே அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

குறிப்பாக மும்பை அணியின் அர்சத் கான் வீசிய ஓவரில் 1 சிக்ஸ்ர், 4 பவுண்டரி பறக்கவிட்டார். தொடர்ந்து அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து ஆடினார். தொடர்ந்து ஆடிய ரஹானே 27 பந்துகளில் 61 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஷிவம் துபே , ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் நிலைத்து ஆடி ஓட்டம் குவித்தனர்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய துபே 28 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து ராயுடு களமிறங்கி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.

இறுதியில் சென்னை அணி 18.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. ருதுராஜ் 40 ஓட்டங்கள் ராயுடு 20 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்நிலையில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமாக வெற்றிபெற்றது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட உலகின் முதல் உயிருள்ள தோல்

உலகின் மிகவும் மேம்பட்ட மனித தோலை குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக வளர்த்துள்ளனர் - மேலும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் அரிய மரபணு தோல் கோளாறுகளை...

NSW இன் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் துரிதமாக செயல்படும் மீட்புப் பணிகள்

நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவை (SES) மற்றும் வானிலை...

லட்சக்கணக்கான ஆட்டிசம் குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை

மத்திய அரசு, லட்சக்கணக்கான ஆட்டிசம் உள்ள குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler நேற்று 46 பில்லியன் டாலர் அரசு...

22 பரிந்துரைகளை செயல்படுத்தும் சட்டங்களை சீர்திருத்தும் விக்டோரியா அரசாங்கம்

குழந்தைகள் பாதுகாப்பை அதிகரிக்க விக்டோரியா அரசு சட்ட அமைப்பில் பெரிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. மெல்பேர்ண் குழந்தை பராமரிப்பு மையங்களில் Joshua Dale Brown செய்ததாகக் கூறப்படும் தொடர்ச்சியான...

லட்சக்கணக்கான ஆட்டிசம் குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை

மத்திய அரசு, லட்சக்கணக்கான ஆட்டிசம் உள்ள குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler நேற்று 46 பில்லியன் டாலர் அரசு...

பெர்த் புதர் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான ‘ரத்தின’ சிலந்தி

பெர்த்தில் "மாணிக்கம்" போன்ற சிலந்தியின் மர்மமான மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 30 ஆண்டுகளாக இந்த இனத்தின் எந்த உயிரினரும் காணப்படவில்லை. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் Shenton...