Newsவிசித்திர பறவைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

விசித்திர பறவைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

-

டென்மார்க் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பறவைகளில் இரு புதிய வகையை கண்டறிந்துள்ளனர். அவை நமது ஊரில் காணப்படும் பறவைகள் போன்று எளிதில் உணவு அளித்து, செல்ல பிராணிகளாக வளர்த்து விட முடியாது. அப்படி நினைக்க கூட முடியாது.

அந்த இரண்டு இன பறவைகளும் பரிணாம வளர்ச்சியின் உதவியால் கொடிய, ஆபத்து நிறைந்தவையாக உருமாறியுள்ளன.

நியூ கினியா நாட்டின் வன பகுதியில் இந்த வகை பறவையினங்கள் காணப்படுகின்றன.

இவை, விஷம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் திறனை வளர்த்து கொண்டுள்ளன. அதன்பின்னர், இந்த பறவைகளே விஷம் நிறைந்த ஒன்றாக மாறி விடுகின்றன.

இது குறித்து டென்மார்க் நாட்டின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆய்வாளரான நட் ஜான்சன் தெரிவிக்கையில்,

இந்த பறவைகள், சக்தி வாய்ந்த விஷ பொருட்களை சகித்து கொள்ள கூடியவையாக மாறுவது மட்டுமின்றி, அவற்றை தங்களது இறக்கைகளின் அடியில் சேர்த்து வைக்கிறது.

அதனால், அவை தனித்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இவை இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் பரவலாக காணப்படும் பச்சிசிபலா ஸ்கிளெகெலி என்ற பறவை குடும்ப வகையை சேர்ந்தவையாகவும் உள்ளன. மற்றொரு பறவையினம் ஆலியாடிரையாஸ் ருபினுச்சா பறவையினங்களில் ஒன்றாகவுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை தவளை இனங்களில் காணப்படும் விஷம் போன்ற இரசாயனங்களை இந்த பறவைகள் சுமந்து திரிகின்றன.

இந்த தவளைகளை லேசாக தொட்டாலே மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி விடும். அவ்வளவு விஷ தன்மை கொண்டவை.

அதனையொத்த விஷத்தன்மையுடன் இந்த பறவைகளும் உள்ளன.

இந்த பறவையினங்களில் கண்டறியப்பட்ட விஷம் ஆனது, உலகம் முழுவதும் இந்த விஷம் பரவியுள்ளது என அடையாளம் காட்டியுள்ளது என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

தங்க நிற விஷ தவளை இனங்களில் காணப்படும் பத்ராசோடாக்சின் என்ற ஒரு வகை ஆற்றல் வாய்ந்த இரசாயன பொருள், அதிக செறிவுடன் உள்ளபோது, அவை தசைகளை செயலிழக்க செய்வதுடன், தொடர்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மாரடைப்பு ஏற்படுத்தும் சக்தி படைத்தவையாகவும் உள்ளன.

இந்த பறவையின் விஷமும் தவளைகளில் காணப்படுவது போன்று இதே வகையை சேர்ந்தவை. அவை தசை திசுக்களுக்குள் சோடியம் என்ற இரசாயன பொருளை ஊடுருவி செல்ல செய்து, தொடர்ந்து அது திறந்திருக்கும்படி செய்து, இறுதியில் மரணம் ஏற்படுத்தும் என ஆய்வாளர் கசுன் பொடாவட்டா தெரிவித்துள்ளார்.

Latest news

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...