News14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி- IPL...

14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி- IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக அணித்தலைவர் ரோகித் சர்மா 28 ஓட்டங்கள், இஷான் கிஷன் 38 ஓட்டங்கள் சேர்த்தனர்.

அதன்பின் களமிறங்கிய கேமரான் கிரீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டம் குவித்தார். மறுமுனையில் சூரியகுமார் யாதவ் 7 ஒட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அவரைத் தொடர்ந்து கேமரான் கிரீனுடன் இணைந்த திலக் வர்மா, ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

17 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 37 ஓட்டங்கள் விளாசிய நிலையில் அவர் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 16 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

மறுமுனையில் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்த கேமரான் கிரீன் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள் சேர்க்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் சேர்த்தது.

ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சென் 2 விக்கெட் எடுத்தார். புவனேஸ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

இதில் அதிகபட்சமாக மாயங்க் அகர்வால் 48 ஓட்டங்கள் எடுத்தார். தொடர்ந்து ஹெயின்ரிச் கிளாசன் 36 ஓட்டங்களும், எய்டன் மார்க்ரம் 22 ஓட்டங்களும், மார்கோ ஜான்சென் 13 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ஓட்டங்களும், ராகுல் திரிபாதி 7 ஓட்டத்துடனும், அபிஷேக் சர்மா ஒரு ஒட்டமும் எடுத்தனர்.

இறுதியாக அப்துல் சமாத் 9 ஓட்டம் எடுத்து ரன் அவுட் ஆனார். இவருக்கு அடுத்ததாக மயங்க் மார்கண்டே 2 ஓட்டங்களும், புவனேஸ்வர் குமுர் 2 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆட்டத்தின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 178 ஒட்டங்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றியடைந்துள்ளது.

Latest news

நியூ சவுத் வேல்ஸில் கடுமையாகி வரும் புகையிலை சட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க புதிய புகையிலை உரிம திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சட்டவிரோத புகையிலை...

கருத்தடைக்கு பயப்படும் ஆஸ்திரேலிய பெண்களுக்கு ஒரு நிவாரணம்

பிரபலமான கருத்தடை மற்றும் மார்பக புற்றுநோய்க்கு இடையே உள்ள தொடர்பை பரிந்துரைக்கும் டேனிஷ் ஆராய்ச்சி குழுவின் ஆய்வின் மீதான அச்சத்தை போக்க நிபுணர்கள் குழு முன்வந்துள்ளது. அதன்படி,...

ஆஸ்திரேலியாவில் கடினமாக உழைக்கும் நாய் என பெயரிடப்பட்ட நாய்

Bear என்ற நாய் ஆஸ்திரேலியாவில் கடினமாக உழைக்கும் நாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. 2024 கோபர் சவால் போட்டியில் நுழைந்த Bear, இந்த ஆண்டு போட்டியின் வெற்றி நாயாக...

விக்டோரியா Expressway-யை ஒட்டிய குடியிருப்பாளர்களுக்கு ஒரு அறிவிப்பு

தென்மேற்கு விக்டோரியாவில் இன்று காலை டிரக் ஒன்று வீட்டின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். டவர் ஹில் பிரின்சஸ் நெடுஞ்சாலையில் பயணித்த பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு...

ஆஸ்திரேலியாவில் தற்போது அதிகம் தேவைப்படும் Tradies வேலைகள்

BizCover ஆனது ஆஸ்திரேலியாவில் அதிக தேவை உள்ள டிரேடீஸ் வேலைகள் பற்றிய புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. கூகுளின் வேலை தேடுதல் தரவுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்த அறிக்கை...

இன்னும் 6 நாட்களில் ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அபராதம்

வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடிய உள்ளது. இதன் காரணமாக, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் அபராதம்...