Newsபூமிக்கு வந்த விண்வெளித் தக்காளி

பூமிக்கு வந்த விண்வெளித் தக்காளி

-

விண்வெளியில், மனிதர்களுக்கான உணவுப்பொருட்களை நிலவில் இருந்து கொண்டு வரப்படும் மண்ணைக் கொண்டு விளைவிக்க முடியுமா என்ற முயற்சியை நாசா கடந்த வருடமே முன்னெடுத்திருந்தது.

எதிர் காலத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கோ, நிலவிற்கோ அல்லது செவ்வாய் கிரகத்திற்கோ ஆய்விற்காக செல்லும் விண்வெளி வீரர்களுக்கு புதிய காய்கறிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நிலவில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு பதப்படுத்தப்பட்டு அந்த மண்ணில் தக்காளி விதை விதைக்கப்பட்டது. பூமியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தக்காளி விதையும் விண்வெளியின் சீதொஷ்ண நிலைக்கு ஏற்ப பதப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த தக்காளி விதைக்கப்பட்டு முளைத்த செடியில் சரியாக 104 நாட்கள் கழித்து தக்காளி விளைந்திருக்கிறது. அந்த தக்காளி பறிக்கப்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விண்கலம் மூலம் நேற்றுமுன்தினம் பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் நாசாவிற்கு சொந்தமான ஸ்பேஸ் சென்டரலில் அந்த தக்காளி வைக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இது, ஒரு முன்னோட்ட முயற்சி என்றும், இதில் வெற்றி பெற்றால் பெரிய அளவில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை விண்வெளியில் விளைவிக்க முடியும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...