Newsகனடாவில் அரசாங்க ஊழியர்கள் போராட்டம்

கனடாவில் அரசாங்க ஊழியர்கள் போராட்டம்

-

கனடாவில் அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அரசாங்க தொழிற்சங்கமான மத்திய பொதுத்துறை தொழிற்சங்கம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த தீர்மானம் அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த காரணத்தினால் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சங்கத்தில் சுமார் 155000 ஊழியர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பமாகும் என தொழிற்சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நாட்டின் 250 இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டம் சம்பள உயர்வு, தொழில் ஒப்பந்தம் உள்ளிட்ட சில விடயங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

போராட்டத்தில் குதித்துள்ள ஊழியர்களில் கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் 35000 பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

போராட்டம் முன்னெடுக்கப்படும் காலப் பகுதியிலும் பேச்சுவார்த்தைகளை தொடர உத்தேசித்துள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...