Newsசீனாவை எதிர்கொள்ள தயாராகும் அவுஸ்திரேலியா

சீனாவை எதிர்கொள்ள தயாராகும் அவுஸ்திரேலியா

-

சீனாவை எதிர்கொள்வதற்காக அவுஸ்திரேலியா நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.

ஏவுகணை யுகத்தில் அவுஸ்திரேலியா புவியியல் ரீதியிலான தனிமைப்படுத்தல் மூலம் தன்னை பாதுகாக்க முடியாது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

110 அறிக்கையை இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பாரிய மாற்றம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் உலகபோருக்கு பின்னர் எந்த நாட்டிலும் காணப்படாத அளவிற்கு சீனாவின் இராணுவ கட்டமைப்பு இப்போது மிகப்பெரியதாக உள்ளது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த இராணுவ கட்டமைப்பு வளர்ச்சி என்பதை தனது மூலோபாய நோக்கம் குறித்து இந்தோ பசுபிக் பிராந்தியத்திற்கு எந்தவித உத்தரவாதத்தையும் வழங்காமல் சீனா முன்னெடுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தரையை அடிப்படையாக கொண்ட ஆயுதங்களில் இருந்து நீண்டதூர ஏவுகணைகளை நோக்கி கவனத்தை செலுத்துவார்கள் என பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதற்கான வெடிபொருட்கள் அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

500 கிலோமீற்றர் செல்லக்கூடிய துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை கொள்வனவு செய்து இராணுவத்திற்கு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

மெல்பேர்ணில் இரண்டு மாடி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெரிய கிடங்கில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில் குறித்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பல முறை...