Newsபி.பி.சி நிறுவன தலைவர் இராஜினாமா

பி.பி.சி நிறுவன தலைவர் இராஜினாமா

-

முன்னாள் பிரதமருக்காக பெரும் தொகை நன்கொடை அளித்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் பி.பி.சி., நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் இராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, பி.பி.சி., நிறுவனம். இதன், ‘டிவி சேனல்’ மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிறுவனத்தின் தலைவராக பிரிட்டனின் ரிச்சர்ட் ஷாரப் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.பி.சி., நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப், கன்சர்வேடிவ் கட்சியின் மிகப் பெரும் நன்கொடையாளராக இருந்து வருகிறார்.

கடந்த, 2021 ஆம் ஆண்டு, அப்போது பிரதமராக இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சனுக்கு பெரிய அளவில் (ஒரு பில்லியன் டொலர் ) நன்கொடை அளித்துள்ளார்.

அதற்கு பரிசாக தான் அரசாங்கத்தின் பரிந்துரையின்படி, அவர் பி.பி.சி., தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

எனவே ரிச்சர்ட் ஷார்ப் நியமனம் பி.பி.சி.யின் நடுநிலைதன்மை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இதையடுத்து, ரிச்சர்ட் ஷார்ப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...