Breaking News"வெளிநாட்டு மாணவர்கள் அல்லது திறமையான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது ஒரு பிரச்சனையல்ல"

“வெளிநாட்டு மாணவர்கள் அல்லது திறமையான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது ஒரு பிரச்சனையல்ல”

-

இந்த நிதியாண்டுக்கு 04 இலட்சம் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வந்தாலும் அதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.

ஒரு வருடத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கைக்கு இணையான குடியேற்றவாசிகள் நாட்டை விட்டு வெளியேறுவதால் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதில் சிரமம் இருக்காது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு குடிவரவு சட்ட மாற்றத்தின் ஊடாக பெருமளவிலான மக்கள் வருவார்கள் எனவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சரியான திட்டம் மத்திய அரசிடம் இல்லை எனவும் லிபரல் எதிர்க்கட்சி கூட்டணி குற்றம் சுமத்தியிருந்தது.

இதற்குப் பதிலளித்த பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஆஸ்திரேலியாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களோ அல்லது திறமையான பணியாளர்களோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொல்லையாக கருதப்படுவதில்லை என்றார்.

பல ஆண்டுகளாக குடிவரவு சட்டங்களில் உள்ள பலவீனங்களை ஒவ்வொன்றாக சரிசெய்வதே தொழிலாளர் அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையான வீட்டு வாடகை பிரச்சனையை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...