Breaking News"வெளிநாட்டு மாணவர்கள் அல்லது திறமையான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது ஒரு பிரச்சனையல்ல"

“வெளிநாட்டு மாணவர்கள் அல்லது திறமையான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது ஒரு பிரச்சனையல்ல”

-

இந்த நிதியாண்டுக்கு 04 இலட்சம் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வந்தாலும் அதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.

ஒரு வருடத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கைக்கு இணையான குடியேற்றவாசிகள் நாட்டை விட்டு வெளியேறுவதால் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதில் சிரமம் இருக்காது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு குடிவரவு சட்ட மாற்றத்தின் ஊடாக பெருமளவிலான மக்கள் வருவார்கள் எனவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சரியான திட்டம் மத்திய அரசிடம் இல்லை எனவும் லிபரல் எதிர்க்கட்சி கூட்டணி குற்றம் சுமத்தியிருந்தது.

இதற்குப் பதிலளித்த பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஆஸ்திரேலியாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களோ அல்லது திறமையான பணியாளர்களோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொல்லையாக கருதப்படுவதில்லை என்றார்.

பல ஆண்டுகளாக குடிவரவு சட்டங்களில் உள்ள பலவீனங்களை ஒவ்வொன்றாக சரிசெய்வதே தொழிலாளர் அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையான வீட்டு வாடகை பிரச்சனையை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

Latest news

பிரான்ஸ் Louvre கொள்ளை தொடர்பாக ஐந்து புதிய சந்தேக நபர்கள் கைது

இந்த மாதம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த நகை திருட்டு தொடர்பாக பிரெஞ்சு போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். அதில் ஒரு முக்கிய சந்தேக நபரும்...

WA நகரில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்த குழந்தை!

மேற்கு ஆஸ்திரேலிய நகரத்தில் ஒரு குழந்தையின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெர்த்திலிருந்து சுமார் 40 கி.மீ தெற்கே உள்ள பால்டிவிஸில் உள்ள ஒரு...

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதங்களை பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, அமெரிக்க அதிபர்...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

சர்வதேச தரகராக அமெரிக்க நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்

39 வயதான ஆஸ்திரேலியரான பீட்டர் வில்லியம்ஸ், ரஷ்யாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ரகசியங்களை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க பாதுகாப்பு...