Breaking News"வெளிநாட்டு மாணவர்கள் அல்லது திறமையான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது ஒரு பிரச்சனையல்ல"

“வெளிநாட்டு மாணவர்கள் அல்லது திறமையான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது ஒரு பிரச்சனையல்ல”

-

இந்த நிதியாண்டுக்கு 04 இலட்சம் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வந்தாலும் அதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.

ஒரு வருடத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கைக்கு இணையான குடியேற்றவாசிகள் நாட்டை விட்டு வெளியேறுவதால் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதில் சிரமம் இருக்காது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு குடிவரவு சட்ட மாற்றத்தின் ஊடாக பெருமளவிலான மக்கள் வருவார்கள் எனவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சரியான திட்டம் மத்திய அரசிடம் இல்லை எனவும் லிபரல் எதிர்க்கட்சி கூட்டணி குற்றம் சுமத்தியிருந்தது.

இதற்குப் பதிலளித்த பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஆஸ்திரேலியாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களோ அல்லது திறமையான பணியாளர்களோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொல்லையாக கருதப்படுவதில்லை என்றார்.

பல ஆண்டுகளாக குடிவரவு சட்டங்களில் உள்ள பலவீனங்களை ஒவ்வொன்றாக சரிசெய்வதே தொழிலாளர் அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையான வீட்டு வாடகை பிரச்சனையை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

Latest news

Coles-ஐ குறிவைத்து கடைகளில் நடக்கும் திட்டமிட்ட குற்றச் சம்பவங்கள்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடி நிறுவனமான Coles, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளின் செல்வாக்கின் கீழ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களுக்கு எதிரான திருட்டு மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. மேலும்...

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...