Newsஅடுத்த வார பட்ஜெட்டில் பல வரி உயர்வுகள்

அடுத்த வார பட்ஜெட்டில் பல வரி உயர்வுகள்

-

எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள மத்திய வரவு செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என திறைசேரி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகளின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களை – எரிபொருள் மற்றும் வீட்டு வாடகைக் கட்டணங்களைக் குறைக்க முறையான திட்டத்தைத் தயாரிக்க மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன.

இதற்கிடையில், பட்ஜெட்டில் சில திருத்தங்கள் சேர்க்கப்படும் என்று கணிக்கப்பட்ட செய்திகள் உள்ளன.

இதன்படி, அதிக வருமானம் ஈட்டுவோருக்கு விதிக்கப்படும் வரி சதவீதங்கள் அதிகரிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

3 மில்லியன் டாலருக்கு மேல் மேல்நிதி இருப்பு வைத்திருக்கும் தனிநபர்கள் மீதான வரி விகிதத்தை 15ல் இருந்து 30 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

2025ல் நடைமுறைக்கு வரும் இது சுமார் 80,000 ஆஸ்திரேலியர்களை பாதிக்கும்.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் எரிசக்தி கட்டணங்கள் – மருந்து விலை குறைப்பு மற்றும் பாதுகாப்புக்கான கூடுதல் ஒதுக்கீடுகள் ஆகியவை அடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

Coles-ஐ குறிவைத்து கடைகளில் நடக்கும் திட்டமிட்ட குற்றச் சம்பவங்கள்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடி நிறுவனமான Coles, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளின் செல்வாக்கின் கீழ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களுக்கு எதிரான திருட்டு மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. மேலும்...

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...