Newsஅடுத்த வார பட்ஜெட்டில் பல வரி உயர்வுகள்

அடுத்த வார பட்ஜெட்டில் பல வரி உயர்வுகள்

-

எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள மத்திய வரவு செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என திறைசேரி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகளின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களை – எரிபொருள் மற்றும் வீட்டு வாடகைக் கட்டணங்களைக் குறைக்க முறையான திட்டத்தைத் தயாரிக்க மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன.

இதற்கிடையில், பட்ஜெட்டில் சில திருத்தங்கள் சேர்க்கப்படும் என்று கணிக்கப்பட்ட செய்திகள் உள்ளன.

இதன்படி, அதிக வருமானம் ஈட்டுவோருக்கு விதிக்கப்படும் வரி சதவீதங்கள் அதிகரிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

3 மில்லியன் டாலருக்கு மேல் மேல்நிதி இருப்பு வைத்திருக்கும் தனிநபர்கள் மீதான வரி விகிதத்தை 15ல் இருந்து 30 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

2025ல் நடைமுறைக்கு வரும் இது சுமார் 80,000 ஆஸ்திரேலியர்களை பாதிக்கும்.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் எரிசக்தி கட்டணங்கள் – மருந்து விலை குறைப்பு மற்றும் பாதுகாப்புக்கான கூடுதல் ஒதுக்கீடுகள் ஆகியவை அடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...