News550 குழந்தைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

550 குழந்தைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

-

நெதர்லாந்து நாட்டின் செயற்கை கருத்தரிப்புச் சட்ட விதிமுறைகளின்படி, விந்தணுவை தானம் செய்யும் ஒரே நபர் 12க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு காரணமாக இருக்கக் கூடாது. மேலும், செயற்கை கருத்தரிப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருவரே தந்தையாக இருக்கவும் அனுமதி கிடையாது. ஆனால் இந்த சட்ட விதிமுறைகளை மீறிய ஒருவர் உள்நாடு, வெளிநாடு என விந்தணு தானம் மூலம் 550க்கும் குழந்தைகளுக்கு தந்தையாகியிருக்கிறார்.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர்(41). குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு உதவிடும் நோக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து தனது விந்தணுக்களை தானம் செய்வதை சேவையாக கருதி தொடங்கினார். இம்முயற்சிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததால் பின்னர், நாளடைவில் இதையேத் தொழிலாகவும் மாற்றிக் கொண்டுள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் செயற்கை கருத்தரிப்புச் சட்ட விதிமுறைகளின்படி, விந்தணுவை தானம் செய்யும் ஒரே நபர் 12க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு காரணமாக இருக்கக் கூடாது. மேலும், செயற்கை கருத்தரிப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருவரே தந்தையாக இருக்கவும் அனுமதி கிடையாது.

நெதர்லாந்தில் உள்ள 11 செயற்கை கருத்தரிப்பு மையங்கள் மற்றும் பிறநாடுகளில் உள்ள இரு மையங்கள் என மொத்தம் 13 மையங்களின் மூலமாக விந்தணு தானத்தை தொடர்ந்து செய்துவந்த மெய்ஜர், இதற்கு முந்தைய தனது தானங்களின் விவரங்களை பிறருக்கு வெளிப்படுத்தாமல் இதுவரையில் சுமார் 550 முதல் 600 குழந்தைகளின் பிறப்புக்கு உதவிகரமாக இருந்துள்ளார். இவர் மூலமாக கருவுற்று, பிரசவித்த ஒரு பெண்மணி இதுபற்றியத் தகவலை அறிந்து திடுக்கிட்டார்.

ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் இனியும் விந்தணு தானம் செய்யக் கூடாது என்று நெதர்லாந்து நாட்டில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களால் 2017-ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், வெளிநாடுகளில் வாழும் தம்பதியர்கள் மற்றும் உள்நாட்டில் உள்ளவர்களை ‘ஒன்லைன்’ மூலமாக தொடர்பு கொண்டு தனது ‘சேவையை’ அவர் தொடர்ந்து வந்ததாக அந்தப் பெண்மணிக்கு தெரிய வந்தது.

‘ஐநூறுக்கும் மேற்பட்ட முகம் தெரியாத குழந்தைகளுக்கு தந்தை என்றால்.. இவர் மூலமாக பரந்து, விரிந்த மரபணுக்களின் பரிணாம வளர்ச்சி உலகின் பல்வேறு நாடுகளில் வேரூன்றி விடுமே… ஒரே தந்தையின் வழித்தோன்றலாகப் பிறந்த உடன்பிறப்புகள் என்னும் உண்மையை அறியாமல் எதிர்காலத்தில் சில குழந்தைகள் தங்களுக்குள் காதல் வயப்பட்டு, திருமண பந்தத்தின் மூலம் இணைந்து விட்டால் சகோதரத்துவம் என்னும் சொல்லின் மாண்புகள் எல்லாம் பாழாகி விடுமே.. உடல்ரீதியாக மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் அவர்கள் வருங்காலத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிவிட நேர்ந்து வீடுமே..’ என்னும் உள்ளுணர்வின் உந்துதலால் ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் இனிமேல் யாருக்கும் விந்தணு தானம் செய்யக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும்’ என்று கோரி அந்தப் பெண்மணி ஹாக் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்குள்ள மற்றொரு தொண்டு நிறுவனமும் இதே கோரிக்கையுடன் மேலும் ஒரு வழக்கினை மெய்ஜருக்கு எதிராகத் தொடர்ந்திருந்தது.

இவ்வழக்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்த நீதிபதி ஹெஸ்ஸலிங், ‘இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட இன்றைய நாளில் இருந்து ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் இனி யாருக்கும் விந்தணு தானம் செய்யக் கூடாது. தனது சேவைகள் தொடர்பாக விளம்பரப்படுத்தவும் கூடாது’ என்று தடை விதித்து உத்தரவிட்டார்.

நெதர்லாந்து நீதிமன்றத்தின் இந்தத் தடையை அவர் மீறும் பட்சத்தில் ஒரு இலட்சம் யூரோக்கள் (இலங்கை மதிப்புக்கு சுமார் 34,813,279.83 ரூபா) அபராதமாக செலுத்த நேரிடும்.

இசைக் கலைஞரான ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் தற்போது கென்யா நாட்டில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...