Newsபிரிட்டன் பக்கிங்காம் அரண்மனைக்குள் மர்ம பொருளை வீசிய நபர் கைது

பிரிட்டன் பக்கிங்காம் அரண்மனைக்குள் மர்ம பொருளை வீசிய நபர் கைது

-

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்குள் வெடிமருந்தை வீசியெறிந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவிருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மெட்ரோபாலிட்டன் பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில்,

பக்கிங்காம் அரண்மனையின் வாயிலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி தோட்டாக்களுக்கான வெடிப்பொருளை அரண்மனைக்குள் வீசியெறிந்துள்ளார். 

மீண்டும் மீண்டும் அவர் அதைச் செய்த நிலையில் அவரை பாதுகாவலர்கள் மற்றும் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். 

பின்னர் அந்தப் பொருட்களை சேகரித்து பாதுகாப்பாக வெடிக்கச் செய்துள்ளனர், மர்ம நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நிகழ்விடத்தில் வேறு ஏதும் அசம்பாவிதம் நடைபெறவில்லை’ என தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட உலகின் முதல் உயிருள்ள தோல்

உலகின் மிகவும் மேம்பட்ட மனித தோலை குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக வளர்த்துள்ளனர் - மேலும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் அரிய மரபணு தோல் கோளாறுகளை...

NSW இன் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் துரிதமாக செயல்படும் மீட்புப் பணிகள்

நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவை (SES) மற்றும் வானிலை...

லட்சக்கணக்கான ஆட்டிசம் குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை

மத்திய அரசு, லட்சக்கணக்கான ஆட்டிசம் உள்ள குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler நேற்று 46 பில்லியன் டாலர் அரசு...

22 பரிந்துரைகளை செயல்படுத்தும் சட்டங்களை சீர்திருத்தும் விக்டோரியா அரசாங்கம்

குழந்தைகள் பாதுகாப்பை அதிகரிக்க விக்டோரியா அரசு சட்ட அமைப்பில் பெரிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. மெல்பேர்ண் குழந்தை பராமரிப்பு மையங்களில் Joshua Dale Brown செய்ததாகக் கூறப்படும் தொடர்ச்சியான...

லட்சக்கணக்கான ஆட்டிசம் குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை

மத்திய அரசு, லட்சக்கணக்கான ஆட்டிசம் உள்ள குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler நேற்று 46 பில்லியன் டாலர் அரசு...

பெர்த் புதர் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான ‘ரத்தின’ சிலந்தி

பெர்த்தில் "மாணிக்கம்" போன்ற சிலந்தியின் மர்மமான மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 30 ஆண்டுகளாக இந்த இனத்தின் எந்த உயிரினரும் காணப்படவில்லை. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் Shenton...