Newsமீன் பிடிக்க வந்தவரை துண்டு துண்டாக கடித்து குதறிய முதலை

மீன் பிடிக்க வந்தவரை துண்டு துண்டாக கடித்து குதறிய முதலை

-

உலகில் அதிக ஆபத்தான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் முதலை தாக்குதலால் மிக மோசமான சம்பவம் வடக்கு குயின்ஸ்லாந்தில் நடந்துள்ளது.

முதலைகள் நிறைந்த நீரில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போன ஒருவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் முழு உடலும் மீட்கப்படவில்லை. உடலின் பாகங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.

அங்கே முதலை தாக்குதலால் உயிரிழந்த இந்த நபர் கெவின் டார்மோடி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 65 வயதான அவர், சனிக்கிழமையன்று வடக்கு குயின்ஸ்லாந்தில் ஒரு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். மீன்பிடிக்க ஆரம்பித்த உடன் முதலை ஒன்று வந்த நிலையில், அதை அவர் விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.

முதலையை விரட்டியடிக்க அவர் சத்தமாகக் கத்தியுள்ளார். மேலும், தண்ணீரில் தொடர் அலைகளையும் உருவாக்கியுள்ளார். இதனால் முதலை அங்கிருந்து சென்றுவிட்டது.

அந்த குழு அதன் பின்னர் வழக்கம் போல மீன்பிடித்த நிலையில், அவர் எதிர்பாராத விதமாக மாயமாகியுள்ளார். எங்குத் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. இதையடுத்து போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் அவரை தேடியுள்ளனர்.

இப்படியே இரண்டு நாட்களுக்குத் தேடுதல் வேட்டை நடந்துள்ளது. அப்போது அங்கே இரண்டு முதலைகள் ஏதோ ஒன்றைத் தின்று கொண்டிருந்ததை ரேஞ்சர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 4.2 மீட்டர் (14 அடி) மற்றும் மற்றொன்று 2.8 மீட்டர் (ஒன்பது அடி) இரு முதலைகளைச் சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து அங்கே இருந்த எச்சங்களை ஆய்வு செய்த போது, அவை மனித எச்சங்கள் என்பது தெரிய வந்தது. இது உண்மையாகவே மிகவும் சோகமான நிகழ்வு என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு குயின்ஸ்லாந்தின் கிராமப்புற நகரமான லாராவைச் சேர்ந்த அந்த நபரின் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளதாம்.

Latest news

பொது போக்குவரத்திற்கு பெரும் சிக்கலாக மாறியுள்ள மின்-பைக்குகள்

வாரத்தில் மின்-பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகமாகி வருவதால், மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்தில் வாகனங்களைச் சுற்றியுள்ள சட்டங்களை மறு மதிப்பீடு செய்து வருகின்றன. மின்-பைக்குகள் மற்றும்...

வடக்கு NSW மாநிலத்தில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு 

வடக்கு நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகள் மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. Coffs துறைமுகத்திற்கு மேற்கே...

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...