Newsமீன் பிடிக்க வந்தவரை துண்டு துண்டாக கடித்து குதறிய முதலை

மீன் பிடிக்க வந்தவரை துண்டு துண்டாக கடித்து குதறிய முதலை

-

உலகில் அதிக ஆபத்தான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் முதலை தாக்குதலால் மிக மோசமான சம்பவம் வடக்கு குயின்ஸ்லாந்தில் நடந்துள்ளது.

முதலைகள் நிறைந்த நீரில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போன ஒருவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் முழு உடலும் மீட்கப்படவில்லை. உடலின் பாகங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.

அங்கே முதலை தாக்குதலால் உயிரிழந்த இந்த நபர் கெவின் டார்மோடி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 65 வயதான அவர், சனிக்கிழமையன்று வடக்கு குயின்ஸ்லாந்தில் ஒரு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். மீன்பிடிக்க ஆரம்பித்த உடன் முதலை ஒன்று வந்த நிலையில், அதை அவர் விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.

முதலையை விரட்டியடிக்க அவர் சத்தமாகக் கத்தியுள்ளார். மேலும், தண்ணீரில் தொடர் அலைகளையும் உருவாக்கியுள்ளார். இதனால் முதலை அங்கிருந்து சென்றுவிட்டது.

அந்த குழு அதன் பின்னர் வழக்கம் போல மீன்பிடித்த நிலையில், அவர் எதிர்பாராத விதமாக மாயமாகியுள்ளார். எங்குத் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. இதையடுத்து போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் அவரை தேடியுள்ளனர்.

இப்படியே இரண்டு நாட்களுக்குத் தேடுதல் வேட்டை நடந்துள்ளது. அப்போது அங்கே இரண்டு முதலைகள் ஏதோ ஒன்றைத் தின்று கொண்டிருந்ததை ரேஞ்சர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 4.2 மீட்டர் (14 அடி) மற்றும் மற்றொன்று 2.8 மீட்டர் (ஒன்பது அடி) இரு முதலைகளைச் சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து அங்கே இருந்த எச்சங்களை ஆய்வு செய்த போது, அவை மனித எச்சங்கள் என்பது தெரிய வந்தது. இது உண்மையாகவே மிகவும் சோகமான நிகழ்வு என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு குயின்ஸ்லாந்தின் கிராமப்புற நகரமான லாராவைச் சேர்ந்த அந்த நபரின் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளதாம்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சமீபத்திய அமைப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஸ்வீடன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல...

அதிகரித்து வரும் பணவீக்கம் வட்டி விகிதக் குறைப்புகளைப் பாதிக்குமா?

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் (ABS) மாதாந்திர புள்ளிவிவரங்களின்படி, ஜூலை மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்ந்தது, நுகர்வோர் விலைகள் ஆண்டுதோறும் 2.8 சதவீதம் உயர்ந்தன. ஜூன் மாதத்தில் நுகர்வோர்...

நியூசிலாந்து அறிமுகப்படுத்திய புதிய விசா

நியூசிலாந்து அரசாங்கம் தொழில்முனைவோர் பணி விசாவை ஒழித்துவிட்டு வணிக முதலீட்டாளர் விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் பொருளாதாரத்தை வளர்க்க உதவும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்...

அமெரிக்காவில் ஒரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு – இரு குழந்தைகள் பலி – 17 பேர் காயம்

அமெரிக்காவின் Minneapolis மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியின் தேவாலய வழிபாட்டில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கோடை...

நியூசிலாந்து அறிமுகப்படுத்திய புதிய விசா

நியூசிலாந்து அரசாங்கம் தொழில்முனைவோர் பணி விசாவை ஒழித்துவிட்டு வணிக முதலீட்டாளர் விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் பொருளாதாரத்தை வளர்க்க உதவும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்...