Newsவிடுமுறைக்கு தாய்லாந்து சென்ற அவுஸ்திரேலியர் மர்ம மரணம்!

விடுமுறைக்கு தாய்லாந்து சென்ற அவுஸ்திரேலியர் மர்ம மரணம்!

-

தாய்லாந்தில் சுற்றுலா மேற்கொண்ட அவுஸ்திரேலியர் ஒருவர், அந்நாட்டு சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ விண்டர் (31) என்பவர், தனது முகத்தில் பச்சை குத்திக் கொள்வதற்காக ஐந்து நாள் பயணமாக தாய்லாந்தின் தீவான Phuketவிற்கு சென்றார்.

செவ்வாய்க்கிழமை அன்று நாடு திரும்ப இருந்த அவர், திங்கட்கிழமை அதிகாலையில் மது அருந்திவிட்டு தகராறு செய்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் படோங் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார். நள்ளிரவு வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்பிற்கான காரணம் உடனடியாக அறியப்படவில்லை. எனினும் விண்டரின் மரணத்திற்கான காரணத்தைக் காட்டும் சிசிடிவி காட்சி இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், அவை இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

பிரேத பரிசோதனைக்காக விண்டரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தாய்லாந்து பொலிஸார் அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

Latest news

கடுமையான ஜாமீன் சட்டங்களைக் கோரி விக்டோரிய மக்கள் போராட்டம்

கடுமையான ஜாமீன் சட்டங்களைக் கோரி விக்டோரிய மக்கள் குழு ஒன்று போராட்டம் நடத்தியுள்ளது. பிணை முறையை மாற்றுவதற்கான வாக்குறுதியை செயல்படுத்துமாறு அவர்கள் விக்டோரியா அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர். விக்டோரியாவின் பெண்டிகோவில்...

ரஷ்யாவின் எச்சரிக்கைகளுக்கு நாங்கள் பயப்படவில்லை – பிரதமர் அல்பானீஸ்

ரஷ்ய எச்சரிக்கைகளுக்கு அஞ்சவில்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறுகிறது. உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் பணியை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

பிலிப்பைன்ஸில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள், சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு எதிரான பாரிய நடவடிக்கையின் போது நடந்த கொலைகளுடன் தொடர்புடையவை. ஹாங்காங்கிலிருந்து திரும்பிய...

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான விசையாழிகளைக் கொண்ட எரிசக்தி திட்டம் குறித்து விக்டோரிய மக்கள் அதிருப்தி

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான காற்றாலை விசையாழிகளைக் கொண்ட, விக்டோரியாவின் நெல்சனில் முன்மொழியப்பட்ட காற்றாலை பண்ணை திட்டம் பல தரப்பினரின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. இது பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் மற்றும்...

ஆஸ்திரேலிய மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

விசா விண்ணப்பதாரர்களுக்கு உள்துறை அமைச்சகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவிற்கு வருகையாளர் விசாவில் வந்த பிறகு மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக...

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான விசையாழிகளைக் கொண்ட எரிசக்தி திட்டம் குறித்து விக்டோரிய மக்கள் அதிருப்தி

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான காற்றாலை விசையாழிகளைக் கொண்ட, விக்டோரியாவின் நெல்சனில் முன்மொழியப்பட்ட காற்றாலை பண்ணை திட்டம் பல தரப்பினரின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. இது பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் மற்றும்...