Newsபட்ஜெட்டில் பயணக் கட்டணம் அல்லது வரிகளை அதிகரிக்க வேண்டாம் என கோரிக்கை

பட்ஜெட்டில் பயணக் கட்டணம் அல்லது வரிகளை அதிகரிக்க வேண்டாம் என கோரிக்கை

-

நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் சுற்றுலாத்துறை தொடர்பான கட்டணங்களையோ, வரிகளையோ அதிகரிக்க வேண்டாம் என மத்திய அரசை இத்துறை வல்லுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

விமான கட்டணம், சுற்றுலா வரிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறும் ஒவ்வொருவரிடமிருந்தும் $60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இது பயணிகள் இயக்கக் கட்டணம் அல்லது (PMC) என அழைக்கப்படுகிறது, இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிகம்.

இது 1978 இல் $10 மதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கட்டணம் விமான கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் இறுதியில் மத்திய அரசாங்கத்திற்கு வரவு வைக்கப்படுகிறது.

குறைந்தபட்சம் அடுத்த 05 வருடங்களுக்கு தற்போதைய நிலையான விகிதத்தில் இக்கட்டணம் பேணப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாட்டில் விமானக் கட்டணங்கள் இன்னும் அதிகமாக உள்ளதால், ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத் துறையை உயர்த்துவதற்கு இது பெரும் தடையாக இருப்பதாகவும் அத்துறை வல்லுநர்கள் மத்திய அரசிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...