Sportsலக்னோவை 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் - IPL 2023

லக்னோவை 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் – IPL 2023

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 227 ஓட்டங்கள் குவித்தது.

ப்மன் கில் 94 ஓட்டத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளார். சகா 43 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரி உட்பட 81 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் சேர்த்தது. இதையடுத்து, 228 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.

தொடக்க ஜோடி கைல் மேயர்ஸ், டி காக் அதிரடியாக ஆடியது. அணியின் எண்ணிக்கை 88 ஆக இருந்தபோது கைல் மேயர்ஸ் 48 ஓட்டத்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. டி காக் ஓரளவு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 70 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

ஆயுஷ் பதோனி 21 ஓட்டத்தில் வெளியேறினார். இறுதியில், லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. குஜராத் சார்பில் மோகித் சர்மா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

நன்றி தமிழன்

Latest news

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

காற்றாலை விபத்துக்குப் பிறகு மேம்பாலம் ஒரு வருடத்திற்கு மூடப்படலாம் என அச்சம்

நேற்று இடம்பெற்ற காற்றாலை விசையாழியின் ஒரு பகுதி சிக்கிக்கொண்ட விபத்தால், குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலை மேம்பாலம் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

காற்றாலை விபத்துக்குப் பிறகு மேம்பாலம் ஒரு வருடத்திற்கு மூடப்படலாம் என அச்சம்

நேற்று இடம்பெற்ற காற்றாலை விசையாழியின் ஒரு பகுதி சிக்கிக்கொண்ட விபத்தால், குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலை மேம்பாலம் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை...