Sportsலக்னோவை 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் - IPL 2023

லக்னோவை 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் – IPL 2023

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 227 ஓட்டங்கள் குவித்தது.

ப்மன் கில் 94 ஓட்டத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளார். சகா 43 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரி உட்பட 81 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் சேர்த்தது. இதையடுத்து, 228 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.

தொடக்க ஜோடி கைல் மேயர்ஸ், டி காக் அதிரடியாக ஆடியது. அணியின் எண்ணிக்கை 88 ஆக இருந்தபோது கைல் மேயர்ஸ் 48 ஓட்டத்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. டி காக் ஓரளவு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 70 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

ஆயுஷ் பதோனி 21 ஓட்டத்தில் வெளியேறினார். இறுதியில், லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. குஜராத் சார்பில் மோகித் சர்மா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

நன்றி தமிழன்

Latest news

திருமணம் செய்யாவிட்டால் வேலையில்லை – சீனாவில் விநோத அறிவுறுத்தல் கடிதம்

சீனாவில் உள்ள ஒரு நிறுவனம், தனது ஊழியர்களை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது, இந்த மார்ச் மாத இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளுங்கள்....

3 வாரங்களுக்குப் பிறகு வத்திக்கானில் ஒலித்த பாப்பரசரின் குரல்

கத்தோலிக்க பக்தர்களுக்கு புனித திருத்தந்தை பிரான்சிஸ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக வத்திக்கான் இன்று அறிவித்துள்ளது. வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் உள்ள ஒலிபெருக்கியில் ஒளிபரப்பப்பட்ட...

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா

உக்ரைனில் உள்ள ஒரு எரிசக்தி மையத்தின் மீது ரஷ்யா நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இது உக்ரேனிய சமூகத்தின் மின்சாரத்தையும் ஆயுதக் கிடங்கையும் சேதப்படுத்தியதாக வெளிநாட்டு...

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தின் சமீபத்திய நிலைமை

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் இன்று காலை நிலவிய கடுமையான வானிலை காரணமாக சுமார் 277,000 வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளன. ஆல்ஃபிரட் சூறாவளி நேற்று இரவு...

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா

உக்ரைனில் உள்ள ஒரு எரிசக்தி மையத்தின் மீது ரஷ்யா நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இது உக்ரேனிய சமூகத்தின் மின்சாரத்தையும் ஆயுதக் கிடங்கையும் சேதப்படுத்தியதாக வெளிநாட்டு...

மெல்பேர்ணில் அதிகரித்து வரும் துப்பாக்கி மிரட்டல்கள்

மெல்பேர்ணின் பேசைட் பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பாக மெல்பேர்ண் காவல்துறை கடந்த...