Sportsராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றை 2வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்கார யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய அணித்தலைவர் சஞ்சு சாம்சன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ஓட்டங்களை சேர்த்தது.

இருவரும் ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜோஸ் பட்லர் 59 பந்தில் 95 ஓட்டத்தில் அவுட்டானார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 66 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 215 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து, ராகுல் திரிபாதி 47 ஓட்டங்களும், அன்மோல்ப்ரீத் சிங் 33 ஓட்டம், ஹெயின்ரிச் கிளாசன் 26 ஓட்டங்களும், கிளென் பிலிப்ஸ் 25 ஓட்டங்களும், அப்துல் சமாத் 11 ஓட்டங்களும், எய்டன் மார்க்ரம் 6 ஓட்டங்களும், மார்கோ ஜான்சன் 3 ஓட்டங்களும் எடுத்தனர்.

அப்துல் சமான் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் அவுட்டாகாமல் விளையாடினர்.

இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்கள் எடுத்து ஐதராபாத் அணி அசத்தலாக வெற்றிப்பெற்றுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

திருமணம் செய்யாவிட்டால் வேலையில்லை – சீனாவில் விநோத அறிவுறுத்தல் கடிதம்

சீனாவில் உள்ள ஒரு நிறுவனம், தனது ஊழியர்களை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது, இந்த மார்ச் மாத இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளுங்கள்....

3 வாரங்களுக்குப் பிறகு வத்திக்கானில் ஒலித்த பாப்பரசரின் குரல்

கத்தோலிக்க பக்தர்களுக்கு புனித திருத்தந்தை பிரான்சிஸ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக வத்திக்கான் இன்று அறிவித்துள்ளது. வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் உள்ள ஒலிபெருக்கியில் ஒளிபரப்பப்பட்ட...

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா

உக்ரைனில் உள்ள ஒரு எரிசக்தி மையத்தின் மீது ரஷ்யா நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இது உக்ரேனிய சமூகத்தின் மின்சாரத்தையும் ஆயுதக் கிடங்கையும் சேதப்படுத்தியதாக வெளிநாட்டு...

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தின் சமீபத்திய நிலைமை

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் இன்று காலை நிலவிய கடுமையான வானிலை காரணமாக சுமார் 277,000 வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளன. ஆல்ஃபிரட் சூறாவளி நேற்று இரவு...

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா

உக்ரைனில் உள்ள ஒரு எரிசக்தி மையத்தின் மீது ரஷ்யா நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இது உக்ரேனிய சமூகத்தின் மின்சாரத்தையும் ஆயுதக் கிடங்கையும் சேதப்படுத்தியதாக வெளிநாட்டு...

மெல்பேர்ணில் அதிகரித்து வரும் துப்பாக்கி மிரட்டல்கள்

மெல்பேர்ணின் பேசைட் பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பாக மெல்பேர்ண் காவல்துறை கடந்த...