Cinema'The Kerala Story' படக்குழுவை சேர்ந்தவருக்கு கொலை மிரட்டல்

‘The Kerala Story’ படக்குழுவை சேர்ந்தவருக்கு கொலை மிரட்டல்

-

நாடு முழுவதும் கடந்த 5 ஆம் திகதி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியானது.

கேரளாவில் இந்து, கிறிஸ்தவ பெண்களை மூளை சலவை செய்து வெளிநாட்டுக்கு கடத்தி சென்று தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக இந்த படத்தின் கதை சித்தரிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு கேரளா, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. என்றாலும் எதிர்ப்பை மீறி நாடு முழுவதும் இந்த படம் திரையிடப்பட்டது.

தமிழ் நாட்டில் பல திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. இதுபோல கேரளாவிலும் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டது.

படம் வெளியான 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே இந்த படத்திற்கு மேற்கு வங்காளம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் வந்தது.

இதுபற்றி படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் மும்பை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதில் படக்குழுவை சேர்ந்தவருக்கு டெலிபோன் மூலம் மிரட்டல் வந்துள்ளது. வீட்டை விட்டு தனியாக வெளியே வந்தால் மீண்டும் வீடு போய் சேரமுடியாது என்று மர்ம நபர் மிரட்டியுள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இது தொடர்பாக மும்பை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

மேலும் ,மிரட்டல் வந்த நபருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் வரவிருக்கும் அவசர சிகிச்சை மருத்துவமனைகள்

நாடு முழுவதும் மேலும் 50 அவசர சிகிச்சை மருத்துவமனைகளை நிறுவுவதாக ஆளும் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. இது மருத்துவ செலவினங்களை $8.5 பில்லியனாக அதிகரிப்பதாக...

விக்டோரியாவில் அல்பானீஸ் அரசாங்கத்தின் வாக்குப் பங்கு சரியும் அறிகுறி

விக்டோரியா மாநிலத்தில் தொழிலாளர் கட்சி 8 இடங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Ledbridge Accent தரவு அறிக்கைகளின்படி, அல்பானீஸ் அரசாங்கம் இரு கட்சி...

மெல்பேர்ணின் முக்கிய சாலைகளில் தொடரும் போலீஸ் நடவடிக்கைகள்

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய சாலையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ண் காவல்துறை நேற்றும் நேற்று முன்தினம் பிரதான மோனாஷ் தனிவழிப்பாதையில்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...

இறந்த உடலுடன் விமானத்தில் பயணித்த ஆஸ்திரேலிய தம்பதியினர்

ஒரு ஆஸ்திரேலிய தம்பதியினர் விமானத்தில் தங்கள் பக்கத்து இருக்கையில் ஒரு இறந்த உடலை வைத்திருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய தம்பதிகளான மிஷெல் ரிங் மற்றும்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...