SportsImpact வீரராக இலங்கை வீரர் - மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை...

Impact வீரராக இலங்கை வீரர் – மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – IPL 2023

-

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பதிரனா, Impact வீரராக களமிறங்கி விக்கெட் வீழ்த்தி மிரட்டினார்.

நாணய சுழற்சியில் வென்ற CSK அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடியது.

கான்வே 10 ஓட்டங்களும், ரஹானே 21 ஓட்டங்களும், கெய்ட்வாட் 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மொயீன் அலி 7 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தூபே (25), ஜடேஜா (21), ராயுடு (23) அதிரடியாக ஓட்டங்கள் குவித்தனர்.

கேப்டன் தோனி 9 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தீபக் சஹர் பந்துவீச்சில் வார்னர் ஓட்டங்கள் எடுக்காமலும், சால்ட் 17 ஓட்டங்களிலும் வெளியேறினர். மார்ஷ் 5 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். அதன் பின்னர் ரோசோவ் , மனீஷ் பாண்டே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது சென்னை அணியில் Impact வீரராக களமிறங்கிய இலங்கையின் பதிரனா மிரட்டலான பந்துவீச்சில் மனீஷ் பாண்டேவை அவுட் செய்து டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இறுதியில் டெல்லி அணி 140 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி அடுத்த சுற்றினை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...