SportsImpact வீரராக இலங்கை வீரர் - மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை...

Impact வீரராக இலங்கை வீரர் – மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – IPL 2023

-

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பதிரனா, Impact வீரராக களமிறங்கி விக்கெட் வீழ்த்தி மிரட்டினார்.

நாணய சுழற்சியில் வென்ற CSK அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடியது.

கான்வே 10 ஓட்டங்களும், ரஹானே 21 ஓட்டங்களும், கெய்ட்வாட் 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மொயீன் அலி 7 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தூபே (25), ஜடேஜா (21), ராயுடு (23) அதிரடியாக ஓட்டங்கள் குவித்தனர்.

கேப்டன் தோனி 9 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தீபக் சஹர் பந்துவீச்சில் வார்னர் ஓட்டங்கள் எடுக்காமலும், சால்ட் 17 ஓட்டங்களிலும் வெளியேறினர். மார்ஷ் 5 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். அதன் பின்னர் ரோசோவ் , மனீஷ் பாண்டே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது சென்னை அணியில் Impact வீரராக களமிறங்கிய இலங்கையின் பதிரனா மிரட்டலான பந்துவீச்சில் மனீஷ் பாண்டேவை அவுட் செய்து டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இறுதியில் டெல்லி அணி 140 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி அடுத்த சுற்றினை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...