NewsWhatsApp தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட எலான் மஸ்க்!

WhatsApp தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட எலான் மஸ்க்!

-

உளவு பார்க்கும் வாட்ஸ்அப்பை கண்மூடித்தனமாக நம்பினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள், ஏனெனில் வாட்ஸ்அப்பை நம்புவது உங்கள் தனிப்பட்ட தகவல்களை சமரசம் செய்யும் நடவடிக்கை என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலோன் மஸ்க் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் வாட்ஸ்அப் குறித்த அவரது கருத்து புயலை கிளப்பியுள்ளது.

வாட்ஸ்அப் தொடர்பாக மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கை வாட்ஸ்அப் பயனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது சமூக ஊடகத்தில் அனைவரும் இந்த அறிக்கையைப் பற்றியே பேசுகிறார்கள். உலக அளவில் கோடிக்கணக்கானோர் அன்றாடம் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் நம்மை ஒட்டுக்கேட்கிறது என்று சொன்னால் யாருக்கு தான் அதிர்ச்சி ஏற்படாது.

ட்விட்டர் இன்ஜினியர் ஒருவர் வாட்ஸ்அப் ஒட்டு கேட்கிறது என்பது குறித்து ட்வீட் செய்துள்ளார். Foad Dabiri என்ற நபர் ஒரு ட்வீட்டில், “WhatsApp பின்னணியில் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது.

இது நான் தூங்கிக்கொண்டிருக்கும் போதும், நான் காலை 6 மணிக்கு எழுந்ததிலிருந்து இது நடக்கிறது” என பதிவிட்ட நிலையில், இந்த நபரின் ட்வீட்டுக்கு பதிலளித்த மஸ்க், “WhatsApp ஐ நம்ப முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க்கும் இதை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து இந்த புகார் குறித்து விசாரிப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...