Sportsஅபார வெற்றி பெற்ற பெங்களூரு அணி - IPL 2023

அபார வெற்றி பெற்ற பெங்களூரு அணி – IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன.

முதல் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்ப ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் ஃபாப் டு பிளெசிஸ் அதிரடியாக ஆடினர்.

விராட் கோலி 18 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஃபாப் டு பிளெசிஸ் 44 பந்துகளில் 55 ஓட்டங்களை குவித்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிலென் மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களை விளாசி 54 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ஆடம் சாம்பா, கேஎம் ஆசிஃப் தலா இரண்டு விக்கெட்களையும், சந்தீப் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் டக் அவுட் ஆகினர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 10 ஓட்டங்களுக்கு நடையை கட்டிய நிலையில், தேவ்தட் படிக்கல் 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின் களமிறங்கிய ஹெட்மயர் 19 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி 59 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பெங்களூரு சார்பில் சிறப்பாக பந்துவீசிய பர்னெல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மைக்கல் பிரேஸ்வெல், கான் ஷர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதன் மூலம் பெங்களூரு அணி 112 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

இந்தோனேசியாவுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்திற்கு தயாராகும் பிரதமர் அல்பானீஸ்

இந்தோனேசியாவுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். நேற்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு விஜயம் செய்த பிரதமரை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

“அடுத்த சில மாதங்கள் அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான நேரம்” – அரசியல் ஆய்வாளர்கள்

அடுத்த சில மாதங்கள் ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸுக்கு ஒரு முக்கியமான நேரமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவரது திறமையும்,...

ஆஸ்திரேலியாவில் ஒரு சக்திவாய்ந்த பாதாள உலகத் தலைவர் விடுவிக்கப்பட்டார்

ஆஸ்திரேலியாவில் பிரபல பாதாள உலக நபரான Tony Mokbel, தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று மெல்பேர்ண் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானபோது, ​​அவருக்கு...

மின்-பைக்குகள் குறித்து சுகாதார அமைச்சரிடமிருந்து ஒரு வலுவான அறிக்கை

ஆஸ்திரேலியாவின் வளர்ந்து வரும் மின்-பைக் நெருக்கடி சாலைகளில் பெரும் ஆபத்தாக மாறி வருவதாக ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Mark Butler கூறியுள்ளார். மின்-பைக்குகளால் ஏற்படும் சாலை விபத்துகள்...

தடைகள் இருந்தாலும் நம்பிக்கையுடன் உலகக் கோப்பையை எதிர்கொள்வேன் – ஆஸ்திரேலிய கேப்டன்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் T20 உலகக் கோப்பைக்கு முந்தைய இறுதிப் பயிற்சி சர்வதேசப் போட்டியையும் மழை காரணமாக அந்த அணி கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் கொழும்பில்...