Sports6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி - IPL 2023

6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி – IPL 2023

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் தூபே 34 பந்துகளில் 48 ஓட்டங்களை எடுத்தார். 

டேவன் கான்வே 30 ஓட்டங்களை, ஜடேஜா 20 ஓட்டங்களை எடுத்தனர். கொல்கத்தா சார்பில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், வைபவ் அரோரா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 145 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. முன்னணி வீரர்களை தீபக் சாஹர் விரைவில் வெளியேற்றினார். இதனால் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா திணறியது. 

அடுத்து இறங்கிய அணித்தலைவர் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். 

4வது விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களும் சேர்த்த நிலையில் ரிங்கு சிங் 54 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில், கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்து வென்றது. 

நிதிஷ் ராணா 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சென்னை சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட 50 சர்வதேச குற்றவாளிகள்

10 நாடுகளில் ஏராளமான குற்றங்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திட்டத்தின் ஒரு...

மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி

இந்த ஆண்டு மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அதன்படி, மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் பதவி தொழிலாளர் கட்சி வேட்பாளர் ரோஜர்...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வேலைகளில் உதவாத ஆண்கள் – சமீபத்திய வெளிப்பாடு

ஆஸ்திரேலியாவில் ஆண்கள் இன்னும் வீட்டு வேலைகளில் உரிய கவனம் செலுத்துவதில்லை என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியப் பெண்கள் ஆண்களை விட வீட்டு வேலைகளைச் செய்வதில்...

ஆஸ்திரேலியா விமான நிலையங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவின் இரண்டாம் நிலை விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மெல்பேர்ணில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் விக்டோரியா...

மீண்டும் சேவையை தொடங்குகின்றன குயின்ஸ்லாந்து விமானங்கள்

குயின்ஸ்லாந்து விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பிரிஸ்பேர்ண் மற்றும் கோல்ட் கோஸ்ட் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் இன்னும் ரத்து...

ஆஸ்திரேலியா விமான நிலையங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவின் இரண்டாம் நிலை விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மெல்பேர்ணில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் விக்டோரியா...