Sports6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி - IPL 2023

6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி – IPL 2023

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் தூபே 34 பந்துகளில் 48 ஓட்டங்களை எடுத்தார். 

டேவன் கான்வே 30 ஓட்டங்களை, ஜடேஜா 20 ஓட்டங்களை எடுத்தனர். கொல்கத்தா சார்பில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், வைபவ் அரோரா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 145 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. முன்னணி வீரர்களை தீபக் சாஹர் விரைவில் வெளியேற்றினார். இதனால் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா திணறியது. 

அடுத்து இறங்கிய அணித்தலைவர் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். 

4வது விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களும் சேர்த்த நிலையில் ரிங்கு சிங் 54 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில், கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்து வென்றது. 

நிதிஷ் ராணா 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சென்னை சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...