SportsPlayoff சென்ற முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் - IPL 2023

Playoff சென்ற முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் – IPL 2023

-

அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 188 ஓட்டங்கள் குவித்தது.

சுப்மன் கில் 58 பந்துகளில் 101 ஓட்டங்களும், சாய் சுதர்சன் 36 பந்துகளில் 47 ஓட்டங்களும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர்குமார் 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜென்சென், பரூக்கி மற்றும் நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை அணியின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே முகமது ஷமி கைப்பற்றினார். அதன் பின்னர் மோஹித் சர்மா மறுமுனையில் தாக்குதல் தொடுத்தார்.

இதனால் ஐதராபாத் அணி நிலைகுலைந்தது. எனினும் தனியாளாக போராடிய ஹெய்ன்ரிச் கிளாசென் 44 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.புவனேஷ்வர்குமார் 27 ஓட்டங்களும், மார்க்கண்டே 9 பந்தில் 18 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

Latest news

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

Bondi துப்பாக்கிச் சூடு நடத்தியது ISIS தாக்குதலா?

ஆஸ்திரேலியாவில் நடந்த Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உரையாற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் மத்திய காவல்துறை ஆணையர் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...