SportsPlayoff சென்ற முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் - IPL 2023

Playoff சென்ற முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் – IPL 2023

-

அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 188 ஓட்டங்கள் குவித்தது.

சுப்மன் கில் 58 பந்துகளில் 101 ஓட்டங்களும், சாய் சுதர்சன் 36 பந்துகளில் 47 ஓட்டங்களும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர்குமார் 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜென்சென், பரூக்கி மற்றும் நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை அணியின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே முகமது ஷமி கைப்பற்றினார். அதன் பின்னர் மோஹித் சர்மா மறுமுனையில் தாக்குதல் தொடுத்தார்.

இதனால் ஐதராபாத் அணி நிலைகுலைந்தது. எனினும் தனியாளாக போராடிய ஹெய்ன்ரிச் கிளாசென் 44 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.புவனேஷ்வர்குமார் 27 ஓட்டங்களும், மார்க்கண்டே 9 பந்தில் 18 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...