SportsPlayoff சென்ற முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் - IPL 2023

Playoff சென்ற முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் – IPL 2023

-

அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 188 ஓட்டங்கள் குவித்தது.

சுப்மன் கில் 58 பந்துகளில் 101 ஓட்டங்களும், சாய் சுதர்சன் 36 பந்துகளில் 47 ஓட்டங்களும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர்குமார் 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜென்சென், பரூக்கி மற்றும் நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை அணியின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே முகமது ஷமி கைப்பற்றினார். அதன் பின்னர் மோஹித் சர்மா மறுமுனையில் தாக்குதல் தொடுத்தார்.

இதனால் ஐதராபாத் அணி நிலைகுலைந்தது. எனினும் தனியாளாக போராடிய ஹெய்ன்ரிச் கிளாசென் 44 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.புவனேஷ்வர்குமார் 27 ஓட்டங்களும், மார்க்கண்டே 9 பந்தில் 18 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

Latest news

அமெரிக்க-ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தின் முடிவு உலக முடிவின் தொடக்கமா?

உலகின் இரண்டு சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளான அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதால், உலகம் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கிறது...

குழந்தை பருவ தடுப்பூசிகள் இல்லாததால் ஆஸ்திரேலியாவில் ஆபத்து உள்ள குழந்தைகளின் உயிர்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் Whooping இருமல் நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான...

12 மற்றும் 13 வயதுடைய இரு NSW சிறுவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது

நியூ சவுத் வேல்ஸின் Upper Hunter Shire-இல் உள்ள Scone நகரில் ஒரு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள்

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தனிநபர்களால் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களை அடையாளம் காண்பது ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆன்லைனில் செயல்படும்...

பராக் மற்றும் மிஷேல் ஒபாமாவை அவமதிக்கும் வீடியோவைப் பகிர்ந்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா மற்றும் மிஷேல் ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும் காணொளியைப் பகிர்ந்து,...

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ள இரு பெரிய வங்கிகள்

ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை உயர்த்திய பிறகு, ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய வங்கிகளான காமன்வெல்த் வங்கி (CBA) மற்றும் Westpac ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கான...