Newsநியூசிலாந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்பட்டார்களா என விசாரணை

நியூசிலாந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்பட்டார்களா என விசாரணை

-

நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் அவுஸ்திரேலியர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தின் போது விடுதியில் 90 பேர் இருந்துள்ளதுடன் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 11 பேர் பற்றிய தெளிவான தகவல் வரவில்லை.

அதனால், உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்படும் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குறித்த கட்டிடத்தில் முறையான தீயை அணைக்கும் அமைப்பு இல்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...