Newsடிஸ்னி பூங்காவில் இரு குடும்பத்தினர் இடையே மோதல்

டிஸ்னி பூங்காவில் இரு குடும்பத்தினர் இடையே மோதல்

-

உலகின் மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரிஸ், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளன.

இந்நிலையில் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் பூங்காவில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.

அந்த பூங்காவில் நிறுவப்பட்ட சின்னமான 100 ஆண்டு நினைவு பலகையின் முன்பு புகைப்படம் எடுப்பதற்காக ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் மற்றொரு குடும்பத்தினர் அவர்களை நகருமாறு கூறியதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு குடும்பத்தையும் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கியுள்ளனர்.

சில நிமிடங்களுக்கு இந்த சண்டை நீடித்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் பூங்கா ஊழியர்கள் இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...