Newsடிஸ்னி பூங்காவில் இரு குடும்பத்தினர் இடையே மோதல்

டிஸ்னி பூங்காவில் இரு குடும்பத்தினர் இடையே மோதல்

-

உலகின் மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரிஸ், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளன.

இந்நிலையில் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் பூங்காவில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.

அந்த பூங்காவில் நிறுவப்பட்ட சின்னமான 100 ஆண்டு நினைவு பலகையின் முன்பு புகைப்படம் எடுப்பதற்காக ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் மற்றொரு குடும்பத்தினர் அவர்களை நகருமாறு கூறியதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு குடும்பத்தையும் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கியுள்ளனர்.

சில நிமிடங்களுக்கு இந்த சண்டை நீடித்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் பூங்கா ஊழியர்கள் இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Augathellaவின் நீர் விநியோக இடமான Charleville-ல் மூளையை உண்ணும் ஆபத்தான அமீபா கண்டுபிடிப்பு

தென்மேற்கு குயின்ஸ்லாந்து ஷையரின் குடிநீர் விநியோக நிலையத்தில் மூளையை உண்ணும் ஒரு அரிய மற்றும் ஆபத்தான அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Charleville மற்றும் Augathella-இற்கான குடிநீரில் Naegleria fowleri என்ற...

உணவுப் பொட்டலத்தில் எடையுடன் கூடிய e எழுத்து என்ன?

உணவுப் பொட்டலத்தில் உள்ள "e" சின்னம் (250 கிராம் e) அதன் எடையுடன் சேர்த்து, கேள்விக்குரிய பொருள் சரியான எடையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது என்று...

தரவு பாதுகாப்பிற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று, அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராட AI ஐப் பயன்படுத்தி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் வங்கி...

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...

தரவு பாதுகாப்பிற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று, அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராட AI ஐப் பயன்படுத்தி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் வங்கி...

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...