Newsடிஸ்னி பூங்காவில் இரு குடும்பத்தினர் இடையே மோதல்

டிஸ்னி பூங்காவில் இரு குடும்பத்தினர் இடையே மோதல்

-

உலகின் மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரிஸ், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளன.

இந்நிலையில் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் பூங்காவில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.

அந்த பூங்காவில் நிறுவப்பட்ட சின்னமான 100 ஆண்டு நினைவு பலகையின் முன்பு புகைப்படம் எடுப்பதற்காக ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் மற்றொரு குடும்பத்தினர் அவர்களை நகருமாறு கூறியதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு குடும்பத்தையும் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கியுள்ளனர்.

சில நிமிடங்களுக்கு இந்த சண்டை நீடித்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் பூங்கா ஊழியர்கள் இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...