Sportsபஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றி - IPL 2023

பஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றி – IPL 2023

-

16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற 66வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ல் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 2 ஓட்டத்திலும், அதர்வா தாயீட் 19 ஓட்டத்திலும், ஷிகர் தவான் 17 ஓட்டத்திலும், லிவிங்ஸ்டோன் 9 ஓட்டத்திலும் அவுட்டாகினர்.

இதனால் பஞ்சாப் அணி 50 ஓட்டத்திலும் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது. 5வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா ஜோடி 64 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், ஜிதேஷ் சர்மா 44 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 49 ஓட்டமும், ஷாருக் கான் 41 ஓட்டமும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து, 188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக தேவ்தட் படிக்கல் 51 ஒட்டங்களும், யாஷவி ஜெய்ஸ்வால் 50 ஒட்டங்களும், ஷிம்ரன் ஹெட்மியர் 46 ஓட்டங்களும்,

ரியான் பராக் 20 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் 2 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஜோஸ் பட்லர் ஓட்டம் எடுக்காமல் அவுட்டானார். துருவ் ஜூரல் 10 ஓட்டங்களும், டிரெண்ட் பவுல்ட் ஒரு ஓட்டமும் எடுத்தனர். இந்த ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 189 ஓட்டங்கள் எடுத்து பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றிப்பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...