Sportsபஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றி - IPL 2023

பஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றி – IPL 2023

-

16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற 66வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ல் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 2 ஓட்டத்திலும், அதர்வா தாயீட் 19 ஓட்டத்திலும், ஷிகர் தவான் 17 ஓட்டத்திலும், லிவிங்ஸ்டோன் 9 ஓட்டத்திலும் அவுட்டாகினர்.

இதனால் பஞ்சாப் அணி 50 ஓட்டத்திலும் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது. 5வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா ஜோடி 64 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், ஜிதேஷ் சர்மா 44 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 49 ஓட்டமும், ஷாருக் கான் 41 ஓட்டமும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து, 188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக தேவ்தட் படிக்கல் 51 ஒட்டங்களும், யாஷவி ஜெய்ஸ்வால் 50 ஒட்டங்களும், ஷிம்ரன் ஹெட்மியர் 46 ஓட்டங்களும்,

ரியான் பராக் 20 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் 2 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஜோஸ் பட்லர் ஓட்டம் எடுக்காமல் அவுட்டானார். துருவ் ஜூரல் 10 ஓட்டங்களும், டிரெண்ட் பவுல்ட் ஒரு ஓட்டமும் எடுத்தனர். இந்த ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 189 ஓட்டங்கள் எடுத்து பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றிப்பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...