Newsஅவுஸ்திரேலியாவில் இனவெறி கருத்துக்களை எதிர்கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியிலிருந்து...

அவுஸ்திரேலியாவில் இனவெறி கருத்துக்களை எதிர்கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

-

அவுஸ்திரேலியாவின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் இனவெறி தாக்குதல்களை எதிர்கொண்டதால் குறிப்பிட்ட நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டன் கிரான்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது தொழில்வாழ்க்கையில் எப்போதும் இனவெறியை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ள அவர் எனினும் மன்னர் சார்ல்ஸின் முடிசூடும் நிகழ்வை தொகுத்துவழங்கிய பின்னர் தனக்கு எதிராக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பூர்வீக இனத்தை சேர்ந்தவரான ஸ்டன் கிரான்ட் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வை தொகுத்துவழங்கியவேளை காலனித்துவம் தனது மக்களை பாதித்த விதம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

முடிசூட்டும் நிகழ்வின் போது கிரீடம் படையெடுப்பு நிலத்திருட்டு அழித்தொழிக்கும் போரை குறிக்கின்றது என அவர் குறிப்பிட்டிருந்தார்,

எனினும் தனது வார்த்தைகளை சிலர் திரிபுபடுத்தினர்,என்னை வெறுப்பு மிகுந்தவனாக சித்தரித்ததுடன் எனக்கு எதிராக இனவெறிதுஸ்பிரயோகங்களை முன்னெடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏபிசி தனது தொகுப்பாளருக்கு எதிரான கொடுரமான துஸ்பிரயோகத்தை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் தனது நிறுவனம் தன்னை பாதுகாக்க தவறிவிட்டது என கிரான்ட் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டன் கிரான்ட் கடந்த நான்கு தசாப்தங்களாக ஊடகத்துறை தொடர்பில் பல விருதுகளை பெற்றதுடன் வர்த்தக தொலைக்காட்சியின் முதலாவது அபோரிஜினியல் தொகுப்பாளர் என்ற பெருமையை பெற்றார்.

எனினும் வெள்ளிக்கிழமை அவர் ஏபிசியின் நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Latest news

எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஒரு விஷப் பொருளைத் தடை செய்யக் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் ஒரு கொடிய நச்சுப் பொருளைத் தடை செய்யுமாறு நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Second-generation anticoagulant rodenticides (SGARs)...

ஆஸ்திரேலியாவில் உருவாகியுள்ள ஒரு புதிய சுற்றுச்சூழல் பிரச்சனை

ஆஸ்திரேலிய பூங்கா ஒன்றில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிழல் துணி , ஒரு கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது தோட்டத்தில் தோண்டும்போது...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...

அடமான வைத்திருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் கட்டணங்களை சரிபார்க்குமாறு வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...

NSW-வில் திடீரென காவல்துறை நடத்திய சோதனை நடவடிக்கை – 7 பேர் கைது

இந்த வாரம் சிட்னி முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் காவல்துறையால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்டதாகக் கூறப்படும் Toyota Hilux காரை நேற்று...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...