Newsஅவுஸ்திரேலியாவில் இனவெறி கருத்துக்களை எதிர்கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியிலிருந்து...

அவுஸ்திரேலியாவில் இனவெறி கருத்துக்களை எதிர்கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

-

அவுஸ்திரேலியாவின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் இனவெறி தாக்குதல்களை எதிர்கொண்டதால் குறிப்பிட்ட நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டன் கிரான்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது தொழில்வாழ்க்கையில் எப்போதும் இனவெறியை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ள அவர் எனினும் மன்னர் சார்ல்ஸின் முடிசூடும் நிகழ்வை தொகுத்துவழங்கிய பின்னர் தனக்கு எதிராக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பூர்வீக இனத்தை சேர்ந்தவரான ஸ்டன் கிரான்ட் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வை தொகுத்துவழங்கியவேளை காலனித்துவம் தனது மக்களை பாதித்த விதம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

முடிசூட்டும் நிகழ்வின் போது கிரீடம் படையெடுப்பு நிலத்திருட்டு அழித்தொழிக்கும் போரை குறிக்கின்றது என அவர் குறிப்பிட்டிருந்தார்,

எனினும் தனது வார்த்தைகளை சிலர் திரிபுபடுத்தினர்,என்னை வெறுப்பு மிகுந்தவனாக சித்தரித்ததுடன் எனக்கு எதிராக இனவெறிதுஸ்பிரயோகங்களை முன்னெடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏபிசி தனது தொகுப்பாளருக்கு எதிரான கொடுரமான துஸ்பிரயோகத்தை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் தனது நிறுவனம் தன்னை பாதுகாக்க தவறிவிட்டது என கிரான்ட் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டன் கிரான்ட் கடந்த நான்கு தசாப்தங்களாக ஊடகத்துறை தொடர்பில் பல விருதுகளை பெற்றதுடன் வர்த்தக தொலைக்காட்சியின் முதலாவது அபோரிஜினியல் தொகுப்பாளர் என்ற பெருமையை பெற்றார்.

எனினும் வெள்ளிக்கிழமை அவர் ஏபிசியின் நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Latest news

2025-26 நிதியாண்டில் அழைத்து வரப்படும் நிரந்தர குடியேறிகள்

2025-26 நிதியாண்டில் 185,000 நிரந்தர குடியிருப்பாளர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் Tony Burke உறுதிப்படுத்தியுள்ளார். குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தப்...

பிரபலமான குழந்தைகள் சாதனம் ஒன்றை பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவிப்பு

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), பிரபலமான குழந்தை பூஸ்டர் இருக்கை தயாரிப்பிற்கு அவசரகால திரும்பப் பெறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மே 1...

காஸாவில் அதிகரிக்கும் பட்டினிச்சாவு

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உட்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத்...

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் இடம்பிடித்த ஆஸ்திரேலியா

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் ஆஸ்திரேலியா 5வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பெர்த்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் குவாண்டாஸ் விமானமும், அமெரிக்காவின்...

World Surf League பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய Surfer Molly Picklum தனது முதல் உலக Surf League சாம்பியன்ஷிப்பை வென்றார். பிஜியின் Cloudbreak கடற்கரையில் நடைபெற்ற உலக Surf League இறுதிப் போட்டியில்...

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் இடம்பிடித்த ஆஸ்திரேலியா

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் ஆஸ்திரேலியா 5வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பெர்த்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் குவாண்டாஸ் விமானமும், அமெரிக்காவின்...