Newsஅவுஸ்திரேலியாவில் இனவெறி கருத்துக்களை எதிர்கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியிலிருந்து...

அவுஸ்திரேலியாவில் இனவெறி கருத்துக்களை எதிர்கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

-

அவுஸ்திரேலியாவின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் இனவெறி தாக்குதல்களை எதிர்கொண்டதால் குறிப்பிட்ட நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டன் கிரான்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது தொழில்வாழ்க்கையில் எப்போதும் இனவெறியை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ள அவர் எனினும் மன்னர் சார்ல்ஸின் முடிசூடும் நிகழ்வை தொகுத்துவழங்கிய பின்னர் தனக்கு எதிராக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பூர்வீக இனத்தை சேர்ந்தவரான ஸ்டன் கிரான்ட் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வை தொகுத்துவழங்கியவேளை காலனித்துவம் தனது மக்களை பாதித்த விதம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

முடிசூட்டும் நிகழ்வின் போது கிரீடம் படையெடுப்பு நிலத்திருட்டு அழித்தொழிக்கும் போரை குறிக்கின்றது என அவர் குறிப்பிட்டிருந்தார்,

எனினும் தனது வார்த்தைகளை சிலர் திரிபுபடுத்தினர்,என்னை வெறுப்பு மிகுந்தவனாக சித்தரித்ததுடன் எனக்கு எதிராக இனவெறிதுஸ்பிரயோகங்களை முன்னெடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏபிசி தனது தொகுப்பாளருக்கு எதிரான கொடுரமான துஸ்பிரயோகத்தை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் தனது நிறுவனம் தன்னை பாதுகாக்க தவறிவிட்டது என கிரான்ட் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டன் கிரான்ட் கடந்த நான்கு தசாப்தங்களாக ஊடகத்துறை தொடர்பில் பல விருதுகளை பெற்றதுடன் வர்த்தக தொலைக்காட்சியின் முதலாவது அபோரிஜினியல் தொகுப்பாளர் என்ற பெருமையை பெற்றார்.

எனினும் வெள்ளிக்கிழமை அவர் ஏபிசியின் நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...