Newsஅவுஸ்திரேலியாவில் இனவெறி கருத்துக்களை எதிர்கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியிலிருந்து...

அவுஸ்திரேலியாவில் இனவெறி கருத்துக்களை எதிர்கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

-

அவுஸ்திரேலியாவின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் இனவெறி தாக்குதல்களை எதிர்கொண்டதால் குறிப்பிட்ட நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டன் கிரான்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது தொழில்வாழ்க்கையில் எப்போதும் இனவெறியை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ள அவர் எனினும் மன்னர் சார்ல்ஸின் முடிசூடும் நிகழ்வை தொகுத்துவழங்கிய பின்னர் தனக்கு எதிராக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பூர்வீக இனத்தை சேர்ந்தவரான ஸ்டன் கிரான்ட் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வை தொகுத்துவழங்கியவேளை காலனித்துவம் தனது மக்களை பாதித்த விதம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

முடிசூட்டும் நிகழ்வின் போது கிரீடம் படையெடுப்பு நிலத்திருட்டு அழித்தொழிக்கும் போரை குறிக்கின்றது என அவர் குறிப்பிட்டிருந்தார்,

எனினும் தனது வார்த்தைகளை சிலர் திரிபுபடுத்தினர்,என்னை வெறுப்பு மிகுந்தவனாக சித்தரித்ததுடன் எனக்கு எதிராக இனவெறிதுஸ்பிரயோகங்களை முன்னெடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏபிசி தனது தொகுப்பாளருக்கு எதிரான கொடுரமான துஸ்பிரயோகத்தை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் தனது நிறுவனம் தன்னை பாதுகாக்க தவறிவிட்டது என கிரான்ட் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டன் கிரான்ட் கடந்த நான்கு தசாப்தங்களாக ஊடகத்துறை தொடர்பில் பல விருதுகளை பெற்றதுடன் வர்த்தக தொலைக்காட்சியின் முதலாவது அபோரிஜினியல் தொகுப்பாளர் என்ற பெருமையை பெற்றார்.

எனினும் வெள்ளிக்கிழமை அவர் ஏபிசியின் நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Latest news

இலவச மெட்ரோ சேவையை அதிகம் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்கள்

சமீபத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை திட்டத்தின் மூலம், விக்டோரியா மக்கள் மெட்ரோ சுரங்கப்பாதையில் இலவச வார இறுதி பயணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த கோடையில்...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...

விக்டோரியா சுகாதார ஊழியர்கள் 6% ஊதிய உயர்வு கோரி பாரிய போராட்டம்

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் தொழில்முறை வேலைநிறுத்தம் நேற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. பணவீக்கத்திற்கு ஏற்ப 6% ஊதிய உயர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைநிறுத்தத்தில் 10,000...

Hate Speach சட்டங்களை நிறைவேற்றும் பிரதிநிதிகள் சபை 

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வரைவு செய்யப்பட்ட மத்திய அரசின் வெறுப்புப் பேச்சுச் சட்டங்கள், லிபரல்களின் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர்...

மெல்பேர்ண் Gymகளில் இருந்து திருடப்படும் கார்கள்

மெல்பேர்ணில் உள்ள பல உடற்பயிற்சி கூடங்களிலிருந்து கார் சாவியைத் திருடி வாகனங்களைக் கடத்த முயன்ற இரண்டு இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன . அவர்கள் திருடப்பட்ட Anytime...

Hate Speach சட்டங்களை நிறைவேற்றும் பிரதிநிதிகள் சபை 

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வரைவு செய்யப்பட்ட மத்திய அரசின் வெறுப்புப் பேச்சுச் சட்டங்கள், லிபரல்களின் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர்...