Newsஅவுஸ்திரேலியாவில் இனவெறி கருத்துக்களை எதிர்கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியிலிருந்து...

அவுஸ்திரேலியாவில் இனவெறி கருத்துக்களை எதிர்கொண்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

-

அவுஸ்திரேலியாவின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் இனவெறி தாக்குதல்களை எதிர்கொண்டதால் குறிப்பிட்ட நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டன் கிரான்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது தொழில்வாழ்க்கையில் எப்போதும் இனவெறியை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ள அவர் எனினும் மன்னர் சார்ல்ஸின் முடிசூடும் நிகழ்வை தொகுத்துவழங்கிய பின்னர் தனக்கு எதிராக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பூர்வீக இனத்தை சேர்ந்தவரான ஸ்டன் கிரான்ட் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வை தொகுத்துவழங்கியவேளை காலனித்துவம் தனது மக்களை பாதித்த விதம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

முடிசூட்டும் நிகழ்வின் போது கிரீடம் படையெடுப்பு நிலத்திருட்டு அழித்தொழிக்கும் போரை குறிக்கின்றது என அவர் குறிப்பிட்டிருந்தார்,

எனினும் தனது வார்த்தைகளை சிலர் திரிபுபடுத்தினர்,என்னை வெறுப்பு மிகுந்தவனாக சித்தரித்ததுடன் எனக்கு எதிராக இனவெறிதுஸ்பிரயோகங்களை முன்னெடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏபிசி தனது தொகுப்பாளருக்கு எதிரான கொடுரமான துஸ்பிரயோகத்தை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் தனது நிறுவனம் தன்னை பாதுகாக்க தவறிவிட்டது என கிரான்ட் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டன் கிரான்ட் கடந்த நான்கு தசாப்தங்களாக ஊடகத்துறை தொடர்பில் பல விருதுகளை பெற்றதுடன் வர்த்தக தொலைக்காட்சியின் முதலாவது அபோரிஜினியல் தொகுப்பாளர் என்ற பெருமையை பெற்றார்.

எனினும் வெள்ளிக்கிழமை அவர் ஏபிசியின் நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Latest news

மனிதர்கள் இல்லாத AI Bots மட்டுமே உள்ள ஒரு புதிய சமூக ஊடக தளம்

மனிதர்கள் இல்லாமல், AI Bots மட்டுமே இருக்கும் ஒரு புதிய சமூக வலைப்பின்னல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . "Moltbook" என்று அழைக்கப்படும் இது, கடந்த வாரம் தொழில்நுட்ப தொழில்முனைவோர்...

விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து லிபரல் கட்சித் தலைவர் ராஜினாமா

முன்னாள் லிபரல் துணைத் தலைவர் சாம் க்ரோத் அடுத்த வாரம் விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மற்ற வாய்ப்புகளைத் தொடரவே இந்த முடிவை எடுப்பதாக...

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடையை அறிமுகப்படுத்தும் மற்றுமொரு நாடு

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக...

புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள்

மிகவும் வெப்பமான காலநிலையில் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது ஊழியர்கள்...

புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள்

மிகவும் வெப்பமான காலநிலையில் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது ஊழியர்கள்...

மெல்பேர்ண் தெருவிற்கு பெயர் மாற்றம் – எதிர்க்கும் குடியிருப்பாளர்கள்

மெல்பேர்ணின் வடக்கே உள்ள லாலரில் உள்ள Prince Andrew Avenue-இல் வசிப்பவர்கள், அதன் பெயரை மாற்றும் யோசனையை நிராகரித்துள்ளனர். இந்தத் தெருவுக்கு பல தசாப்தங்களாக முன்னாள் பிரிட்டிஷ்...