Newsமின்சார துப்பாக்கியால் 95 வயது மூதாட்டியை தாக்கிய அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி

மின்சார துப்பாக்கியால் 95 வயது மூதாட்டியை தாக்கிய அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி

-

அவுஸ்திரேலியாவில் 95 வயதான பெண்ணை பொலிஸ் அதிகாரி மின்சார துப்பாக்கியால் தாக்கியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிட்னிக்கு தெற்கே 250 மைல் தொலைவில் உள்ள சிறிய நகரமான கூமாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் புதன்கிழமை காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

முதியோர் இல்லத்திற்குள் நுழைந்து டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட 95 வயது மூதாட்டி மீது டேசர் துப்பாக்கியால் சுட்ட அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி இப்போது விசாரணையில் உள்ளார்.

இரண்டு நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் அதிகாரிகள், ஒரு வயதான நோயாளியான Clare Nowland சமையலறையிலிருந்து ஒரு கூர்மையான கத்தியை எடுத்து தாக்க முயன்றார் என கூறி டேசர் துப்பாக்கியால் தாக்கியதாக NSW உதவி பொலிஸ் கமிஷனர் Peter Cotter கூறியுளளார்.

12 வருட அனுபவமுள்ள சிரேஷ்ட கான்ஸ்டபிளாக இருந்த குறித்த அதிகாரியிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரால் பெயர் வெளியிடப்படாத அந்த பொலிஸ் அதிகாரி, “nonoperational” பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...