Newsமின்சார துப்பாக்கியால் 95 வயது மூதாட்டியை தாக்கிய அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி

மின்சார துப்பாக்கியால் 95 வயது மூதாட்டியை தாக்கிய அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி

-

அவுஸ்திரேலியாவில் 95 வயதான பெண்ணை பொலிஸ் அதிகாரி மின்சார துப்பாக்கியால் தாக்கியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிட்னிக்கு தெற்கே 250 மைல் தொலைவில் உள்ள சிறிய நகரமான கூமாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் புதன்கிழமை காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

முதியோர் இல்லத்திற்குள் நுழைந்து டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட 95 வயது மூதாட்டி மீது டேசர் துப்பாக்கியால் சுட்ட அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி இப்போது விசாரணையில் உள்ளார்.

இரண்டு நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் அதிகாரிகள், ஒரு வயதான நோயாளியான Clare Nowland சமையலறையிலிருந்து ஒரு கூர்மையான கத்தியை எடுத்து தாக்க முயன்றார் என கூறி டேசர் துப்பாக்கியால் தாக்கியதாக NSW உதவி பொலிஸ் கமிஷனர் Peter Cotter கூறியுளளார்.

12 வருட அனுபவமுள்ள சிரேஷ்ட கான்ஸ்டபிளாக இருந்த குறித்த அதிகாரியிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரால் பெயர் வெளியிடப்படாத அந்த பொலிஸ் அதிகாரி, “nonoperational” பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Latest news

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43...

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

பெர்த்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய செல்லப்பிராணி சட்டம் – மீறினால் $300 அபராதம்

பெர்த்தில் உள்ள Melville நகர சபை வீட்டுப் பூனைகள் குறித்து சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு வீட்டில் இரண்டு பூனைகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...