Breaking Newsசிட்னியில் பயங்கர தீ விபத்து

சிட்னியில் பயங்கர தீ விபத்து

-

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் நேற்று (25) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டிடம் முழுவதும் பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. 

அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பரவ ஆரம்பித்துள்ளது. சிறிது நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது. 

கட்டிடத்தின் மேல் தள சுவர் முழுவதும் சாய்ந்து கீழே தெருவில் சிதறியுள்ளது. தரையில் நின்றிருந்த ஒரு வாகனம் தீயில் கருகியது. 

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த போராடிவருகின்றனர். 

தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால், பொதுமக்கள் அப்பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறு தீயணைப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Latest news

கணையப் புற்றுநோயைக் கண்டறிய புதிய இரத்தப் பரிசோதனை

ஆஸ்திரேலிய கணைய புற்றுநோய் அறக்கட்டளை (PanKind) கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான புதிய இரத்த பரிசோதனை இப்போது ஆஸ்திரேலியாவில் கிடைக்கிறது என்று அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, இந்த இரத்தப்...

ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் ஆஸ்திரேலியாவின் சர்வதேச வர்த்தகம் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை சர்வதேச வர்த்தக விலை குறியீடுகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. அதன்படி, கடந்த...

மனதையும் கணினியையும் இணைக்கும் ஒரு இடைமுகத்தை உருவாக்கும் Neuralink

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான அமெரிக்க நிறுவனமான Neuralink, அதன் சமீபத்திய ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை கணினியையும் மனித மூளையையும் இணைக்கக்கூடிய ஒரு...

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...