Newsலண்டன் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கோஹினூர் வைரம்

லண்டன் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கோஹினூர் வைரம்

-

உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று, கோஹினூர் வைரமாகும். இந்த கோஹினூர் வைரம், இந்தியாவில் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது.

இதன் எடை 105.6 கேரட். இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வைத்திருந்தார் என்றும், அது 1857 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்கு பின்னர் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த வைரத்தைத் திரும்பத்தர முடியாது என்று இங்கிலாந்து தெரிவித்து விட்டது. இந்த வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தைத்தான் மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்தார்.

ஆனால், இந்த வைரத்தை இந்தியா சொந்தம் கொண்டாடுவது உட்பட பல்வேறு சர்ச்சைகள் உள்ளதால், இது பதிக்கப்பட்ட கிரீடத்தை அணிவதை இங்கிலாந்து ராணி கமீலா பார்க்கர் தவிர்த்து விட்டார்.

அவர் அதற்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் அணிந்தார். இருப்பினும் இந்த வைரம், இங்கிலாந்து அரசின் சொத்தாகத்தான் இருக்கின்றது.

லண்டன் நகரில் உள்ள லண்டன் டவரில் இன்று (26) ஆரம்பமாகி வருகின்ற நவம்பர் மாதம் வரை நடைபெறுகிற புதிய ஆபரணக் கண்காட்சியில் இந்த வைரம் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

இந்தியா சொந்தம் கொண்டாடுகிற வைரத்துக்கு, இது வெளிப்படையான அங்கீகாரமாக அமைகிறது. கோஹினூர் வைரம் மட்டுமின்றி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆபரணங்களும் இந்தக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

Latest news

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

வெடிகுண்டு பயம் காரணமாக பெர்த் படையெடுப்பு தின பேரணி ரத்து

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின எதிர்ப்பு பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வீசியதாக 31 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில்...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...