Sportsமும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்குல் நுழைந்த குஜராத் - IPL 2023

மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்குல் நுழைந்த குஜராத் – IPL 2023

-

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 62 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

மழைக்காரணமாக இன்றைய போட்டி சற்று தாமதமாகவே ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

அந்த வகையில் முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அதிகபடியாக சுப்மன் கில் 129 ஓட்டங்களையும், சாய் சுதர்சன் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சுப்மன் கில் ஐபிஎல் போட்டிகளில் பெற்ற 3ஆவது சதம் இதுவாகும்.இவர் 60 பந்துகளுக்கு முகங்கொடுத்து 7 நான்கு ஓட்டங்கள், 10 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இந்த சதத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பந்துவீச்சில் மும்பை அணியின் பியூஷ் சவ்லா 45 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை கைப்பற்றினார்.இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட மும்பை அணி களத்தில் இறங்கியது.

இந்தநிலையில், 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இதனால், குஜராத் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அணிசார்பில் அதிகபடியாக, சூர்யகுமார் யாதவ் 61 ஓட்டங்களையும், திலக் வர்மா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் குஜராத் அணியின் மொஹம்மட் ஷமி 2 விக்கெட்டுக்களையும், மோகித் ஷர்மா 5 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 7 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய,எதிர்வரும் 28ஆம் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

புதிய விமானங்களை சேர்த்துள்ள Qantas Airlines

ஆஸ்திரேலியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய விமான நிறுவனமான Qantas, இரண்டு புதிய விமானங்களைச் சேர்த்துள்ளது. அதன்படி, இரண்டு Airbus A220 விமானங்கள் நிறுவனத்தின் விமானப் படையில் இணைந்துள்ளதாக அவர்கள்...

தீயணைப்பு சேவை குறித்த ஜெசிந்தாவின் அறிக்கைக்கு பட்ஜெட் அலுவலகம் எதிர்ப்பு

கிராமப்புற தீயணைப்பு சேவைக்கான (CFA) நிதி குறைக்கப்படவில்லை என்ற விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கூற்றை நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (PBO) நிராகரித்துள்ளது. பிரதமர் தனது அரசாங்கம்...

ஸ்பெயினில் இரு அதிவேக தொடருந்துகள் மோதி 21 பேர் பலி

தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக தொடருந்துகள் (High-speed trains) மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 100க்கும்...

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட சிட்னி மீன் சந்தை

830 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட புதிய சிட்னி மீன் சந்தை நேற்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. மேலும் பெரும் கூட்டம் காரணமாக பலர் திருப்பி...

தீயணைப்பு சேவை குறித்த ஜெசிந்தாவின் அறிக்கைக்கு பட்ஜெட் அலுவலகம் எதிர்ப்பு

கிராமப்புற தீயணைப்பு சேவைக்கான (CFA) நிதி குறைக்கப்படவில்லை என்ற விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கூற்றை நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (PBO) நிராகரித்துள்ளது. பிரதமர் தனது அரசாங்கம்...