Sportsமும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்குல் நுழைந்த குஜராத் - IPL 2023

மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்குல் நுழைந்த குஜராத் – IPL 2023

-

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 62 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

மழைக்காரணமாக இன்றைய போட்டி சற்று தாமதமாகவே ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

அந்த வகையில் முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அதிகபடியாக சுப்மன் கில் 129 ஓட்டங்களையும், சாய் சுதர்சன் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சுப்மன் கில் ஐபிஎல் போட்டிகளில் பெற்ற 3ஆவது சதம் இதுவாகும்.இவர் 60 பந்துகளுக்கு முகங்கொடுத்து 7 நான்கு ஓட்டங்கள், 10 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இந்த சதத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பந்துவீச்சில் மும்பை அணியின் பியூஷ் சவ்லா 45 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை கைப்பற்றினார்.இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட மும்பை அணி களத்தில் இறங்கியது.

இந்தநிலையில், 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இதனால், குஜராத் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அணிசார்பில் அதிகபடியாக, சூர்யகுமார் யாதவ் 61 ஓட்டங்களையும், திலக் வர்மா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் குஜராத் அணியின் மொஹம்மட் ஷமி 2 விக்கெட்டுக்களையும், மோகித் ஷர்மா 5 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 7 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய,எதிர்வரும் 28ஆம் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...