Sportsமும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்குல் நுழைந்த குஜராத் - IPL 2023

மும்பையை வீழ்த்தி இறுதி போட்டிக்குல் நுழைந்த குஜராத் – IPL 2023

-

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 62 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

மழைக்காரணமாக இன்றைய போட்டி சற்று தாமதமாகவே ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

அந்த வகையில் முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அதிகபடியாக சுப்மன் கில் 129 ஓட்டங்களையும், சாய் சுதர்சன் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சுப்மன் கில் ஐபிஎல் போட்டிகளில் பெற்ற 3ஆவது சதம் இதுவாகும்.இவர் 60 பந்துகளுக்கு முகங்கொடுத்து 7 நான்கு ஓட்டங்கள், 10 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இந்த சதத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பந்துவீச்சில் மும்பை அணியின் பியூஷ் சவ்லா 45 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை கைப்பற்றினார்.இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட மும்பை அணி களத்தில் இறங்கியது.

இந்தநிலையில், 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இதனால், குஜராத் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அணிசார்பில் அதிகபடியாக, சூர்யகுமார் யாதவ் 61 ஓட்டங்களையும், திலக் வர்மா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் குஜராத் அணியின் மொஹம்மட் ஷமி 2 விக்கெட்டுக்களையும், மோகித் ஷர்மா 5 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 7 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய,எதிர்வரும் 28ஆம் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...