NewsMeta ஊழியர்களை பணி நீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி செலவு

Meta ஊழியர்களை பணி நீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி செலவு

-

மெட்டா நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய, 8 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்ததாக மெட்டா நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.

இந்நிலையில் மெட்டா நிறுவனம் 2023ஆம் ஆண்டின் காலாண்டு முடிவுகளை, பரிமாற்ற அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது. இதில் மெட்டா நிறுவனத்தின் பணி நீக்கத்திற்காக, செலவு செய்யப்பட்ட தொகையை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் பணி நீக்கம் செய்ய ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது, என்பது பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளது.

இதன்படி ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள், இந்திய ரூபாயின் மதிப்பு படி 8000 கோடி செலவாகியிருப்பதாக, மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest news

திருமணம் செய்யாவிட்டால் வேலையில்லை – சீனாவில் விநோத அறிவுறுத்தல் கடிதம்

சீனாவில் உள்ள ஒரு நிறுவனம், தனது ஊழியர்களை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது, இந்த மார்ச் மாத இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளுங்கள்....

3 வாரங்களுக்குப் பிறகு வத்திக்கானில் ஒலித்த பாப்பரசரின் குரல்

கத்தோலிக்க பக்தர்களுக்கு புனித திருத்தந்தை பிரான்சிஸ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக வத்திக்கான் இன்று அறிவித்துள்ளது. வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் உள்ள ஒலிபெருக்கியில் ஒளிபரப்பப்பட்ட...

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா

உக்ரைனில் உள்ள ஒரு எரிசக்தி மையத்தின் மீது ரஷ்யா நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இது உக்ரேனிய சமூகத்தின் மின்சாரத்தையும் ஆயுதக் கிடங்கையும் சேதப்படுத்தியதாக வெளிநாட்டு...

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தின் சமீபத்திய நிலைமை

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் இன்று காலை நிலவிய கடுமையான வானிலை காரணமாக சுமார் 277,000 வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளன. ஆல்ஃபிரட் சூறாவளி நேற்று இரவு...

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா

உக்ரைனில் உள்ள ஒரு எரிசக்தி மையத்தின் மீது ரஷ்யா நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இது உக்ரேனிய சமூகத்தின் மின்சாரத்தையும் ஆயுதக் கிடங்கையும் சேதப்படுத்தியதாக வெளிநாட்டு...

மெல்பேர்ணில் அதிகரித்து வரும் துப்பாக்கி மிரட்டல்கள்

மெல்பேர்ணின் பேசைட் பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பாக மெல்பேர்ண் காவல்துறை கடந்த...