Melbourne120 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ள மெல்போர்ன் பூகம்பம்

120 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ள மெல்போர்ன் பூகம்பம்

-

மெல்போர்ன் மாநகரப் பகுதியில் நேற்றிரவு 120 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

சன்பரியை சுற்றி நேற்று இரவு 11.40 மணியளவில் ஏற்பட்ட அதிர்ச்சி பல பகுதிகளில் உணரப்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 3.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 03 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அவுஸ்திரேலிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அதிர்ச்சி தாஸ்மேனியாவின் ஹோபார்ட்டில் கூட உணரப்பட்டது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கு உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்றாலும், பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில், மெல்போர்னின் மையத்திலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 5.9 என்ற வலுவான நிலநடுக்கம் பதிவானது.

இருப்பினும், மெல்போர்ன் பெருநகரப் பகுதிக்கு அருகே மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் 120 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பதிவு செய்யப்பட்டது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...