NewsChatGPT மூலம் பல லட்சங்கள் சம்பாதிக்கும் அமெரிக்க எழுத்தாளர்

ChatGPT மூலம் பல லட்சங்கள் சம்பாதிக்கும் அமெரிக்க எழுத்தாளர்

-

அமெரிக்காவை சேர்ந்த டிம் பவுச்சர் என்ற எழுத்தாளர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து அசத்தியுள்ளார்.

OpenAi என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பள்ளி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலை நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என பல்வேறு துறையினருக்கும் கையில் கிடைத்துள்ள மிகப்பெரிய வரமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த டிம் பவுச்சர் என்ற எழுத்தாளர் பல ஆண்டுகளாக புனை கதைகள் எழுதி அதை புத்தகங்களாக அச்சிட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டதை அறிந்து, அதை பயன்படுத்தி டிம் பவுச்சர் நூற்றுக்கணக்கான கதைகளை எழுதி அதனை புத்தகங்களாக அச்சடித்து விற்பனை செய்துள்ளார்.

இந்த புத்தகங்கள் தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஒரு நாளைக்கு 500 புத்தகங்கள் வரை விற்பனை ஆவதுடன் சுமார் 2000 அமெரிக்க டாலர்களை இதன் மூலம் சம்பாதிக்க தொடங்கியுள்ளார்.

இவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது புத்தகங்களின் ஆங்காங்கே புகைப்படங்களையும் இடம்பெற செய்துள்ளார்.

டிம் பவுச்சர் தன்னுடைய புத்தகங்களை எழுதுவதற்காக Chat GPT உடன் Anthropic’s claude என்கிற Chatbot-யும் பயன்படுத்தி வருகிறார் .

இவரை போலவே தற்போது பலரும் Chat GPT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புத்தகங்களை எழுத தொடங்கியுள்ளனர், அத்துடன் அவற்றின் மூலம் வருமானமும் ஈட்டத் தொடங்கியுள்ளனர்.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...