NewsChatGPT மூலம் பல லட்சங்கள் சம்பாதிக்கும் அமெரிக்க எழுத்தாளர்

ChatGPT மூலம் பல லட்சங்கள் சம்பாதிக்கும் அமெரிக்க எழுத்தாளர்

-

அமெரிக்காவை சேர்ந்த டிம் பவுச்சர் என்ற எழுத்தாளர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து அசத்தியுள்ளார்.

OpenAi என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பள்ளி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலை நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என பல்வேறு துறையினருக்கும் கையில் கிடைத்துள்ள மிகப்பெரிய வரமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த டிம் பவுச்சர் என்ற எழுத்தாளர் பல ஆண்டுகளாக புனை கதைகள் எழுதி அதை புத்தகங்களாக அச்சிட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டதை அறிந்து, அதை பயன்படுத்தி டிம் பவுச்சர் நூற்றுக்கணக்கான கதைகளை எழுதி அதனை புத்தகங்களாக அச்சடித்து விற்பனை செய்துள்ளார்.

இந்த புத்தகங்கள் தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஒரு நாளைக்கு 500 புத்தகங்கள் வரை விற்பனை ஆவதுடன் சுமார் 2000 அமெரிக்க டாலர்களை இதன் மூலம் சம்பாதிக்க தொடங்கியுள்ளார்.

இவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது புத்தகங்களின் ஆங்காங்கே புகைப்படங்களையும் இடம்பெற செய்துள்ளார்.

டிம் பவுச்சர் தன்னுடைய புத்தகங்களை எழுதுவதற்காக Chat GPT உடன் Anthropic’s claude என்கிற Chatbot-யும் பயன்படுத்தி வருகிறார் .

இவரை போலவே தற்போது பலரும் Chat GPT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புத்தகங்களை எழுத தொடங்கியுள்ளனர், அத்துடன் அவற்றின் மூலம் வருமானமும் ஈட்டத் தொடங்கியுள்ளனர்.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...