NewsChatGPT மூலம் பல லட்சங்கள் சம்பாதிக்கும் அமெரிக்க எழுத்தாளர்

ChatGPT மூலம் பல லட்சங்கள் சம்பாதிக்கும் அமெரிக்க எழுத்தாளர்

-

அமெரிக்காவை சேர்ந்த டிம் பவுச்சர் என்ற எழுத்தாளர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து அசத்தியுள்ளார்.

OpenAi என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பள்ளி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலை நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என பல்வேறு துறையினருக்கும் கையில் கிடைத்துள்ள மிகப்பெரிய வரமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த டிம் பவுச்சர் என்ற எழுத்தாளர் பல ஆண்டுகளாக புனை கதைகள் எழுதி அதை புத்தகங்களாக அச்சிட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டதை அறிந்து, அதை பயன்படுத்தி டிம் பவுச்சர் நூற்றுக்கணக்கான கதைகளை எழுதி அதனை புத்தகங்களாக அச்சடித்து விற்பனை செய்துள்ளார்.

இந்த புத்தகங்கள் தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஒரு நாளைக்கு 500 புத்தகங்கள் வரை விற்பனை ஆவதுடன் சுமார் 2000 அமெரிக்க டாலர்களை இதன் மூலம் சம்பாதிக்க தொடங்கியுள்ளார்.

இவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது புத்தகங்களின் ஆங்காங்கே புகைப்படங்களையும் இடம்பெற செய்துள்ளார்.

டிம் பவுச்சர் தன்னுடைய புத்தகங்களை எழுதுவதற்காக Chat GPT உடன் Anthropic’s claude என்கிற Chatbot-யும் பயன்படுத்தி வருகிறார் .

இவரை போலவே தற்போது பலரும் Chat GPT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புத்தகங்களை எழுத தொடங்கியுள்ளனர், அத்துடன் அவற்றின் மூலம் வருமானமும் ஈட்டத் தொடங்கியுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...