Sports5-வது முறையாக மகுடம் சூடிய Chennai Super Kings - IPL...

5-வது முறையாக மகுடம் சூடிய Chennai Super Kings – IPL 2023

-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் குஜராத்தை வீழ்த்தி 5-வது முறையாக மகுடம் சூடியது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் திகதி ஆரம்பமானது.

10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் கொண்டாட்டத்தில் லீக் மற்றும் ‘பிளே-ஓவ் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், சென்னை சுப்பர் கிங்சும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. மகுடத்துக்கான இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற இருந்தது.

ஆனால் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் இறுதிப்போட்டி மறுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில் குஜராத்- சென்னை அணிகள் இடையிலான இறுதி போhட்டி நேற்றிரவு ஆமதாபாத்தில் இடம்பெற்றது.

இரு அணியிலும் மாற்றமில்லை. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித்தலைவர் தோனி, மழைக்குரிய அறிகுறி தென்படுவதால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதன்படி சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர்.

எச்சரிக்கையுடன் தொடங்கிய இருவருக்கும் அதிர்ஷ்டம் கைகொடுத்தது. கில் 3 ஓட்டத்தில் இருந்த போது வழங்கிய மிக எளிதான கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட கில், தேஷ்பாண்டே மற்றும் தீக்ஷனா ஓவர்களில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

மறுமுனையில் வேகம் காட்டிய சஹா 21 ஓட்டத்தில் இருந்தபோது பந்து வீசிய தீபக் சாஹருக்கு கேட்ச் செய்ய வாய்ப்பு கிட்டியது. இந்த முறையும் பிடிக்க தவறினார்.

அத்துடன் சஹா 27 ஓட்டத்தில் இரு முறை ரன்-அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்தார். கண்டம் தப்பிய இருவரும் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ஓட்டம் திரட்டி வலுவான அடித்தளம் அமைத்தனர். ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பவர்-பிளேயில் எடுக்கப்பட்ட சிறந்த ஸ்கோர் இதுவாகும்.

ஸ்கோர் 67 ஆக உயர்ந்த போது சுப்மன் கில் 39 ஓட்டங்களில் (20 பந்து, 7 பவுண்டரி) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் விக்கெட் கீப்பர் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...