Sports5-வது முறையாக மகுடம் சூடிய Chennai Super Kings - IPL...

5-வது முறையாக மகுடம் சூடிய Chennai Super Kings – IPL 2023

-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் குஜராத்தை வீழ்த்தி 5-வது முறையாக மகுடம் சூடியது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் திகதி ஆரம்பமானது.

10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் கொண்டாட்டத்தில் லீக் மற்றும் ‘பிளே-ஓவ் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், சென்னை சுப்பர் கிங்சும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. மகுடத்துக்கான இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற இருந்தது.

ஆனால் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் இறுதிப்போட்டி மறுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில் குஜராத்- சென்னை அணிகள் இடையிலான இறுதி போhட்டி நேற்றிரவு ஆமதாபாத்தில் இடம்பெற்றது.

இரு அணியிலும் மாற்றமில்லை. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித்தலைவர் தோனி, மழைக்குரிய அறிகுறி தென்படுவதால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதன்படி சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர்.

எச்சரிக்கையுடன் தொடங்கிய இருவருக்கும் அதிர்ஷ்டம் கைகொடுத்தது. கில் 3 ஓட்டத்தில் இருந்த போது வழங்கிய மிக எளிதான கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட கில், தேஷ்பாண்டே மற்றும் தீக்ஷனா ஓவர்களில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

மறுமுனையில் வேகம் காட்டிய சஹா 21 ஓட்டத்தில் இருந்தபோது பந்து வீசிய தீபக் சாஹருக்கு கேட்ச் செய்ய வாய்ப்பு கிட்டியது. இந்த முறையும் பிடிக்க தவறினார்.

அத்துடன் சஹா 27 ஓட்டத்தில் இரு முறை ரன்-அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்தார். கண்டம் தப்பிய இருவரும் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ஓட்டம் திரட்டி வலுவான அடித்தளம் அமைத்தனர். ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பவர்-பிளேயில் எடுக்கப்பட்ட சிறந்த ஸ்கோர் இதுவாகும்.

ஸ்கோர் 67 ஆக உயர்ந்த போது சுப்மன் கில் 39 ஓட்டங்களில் (20 பந்து, 7 பவுண்டரி) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் விக்கெட் கீப்பர் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

Latest news

தேர்தல் செலவு வரம்பை எதிர்த்து ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார். இந்தப்...

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

கார் விபத்தில் பெரிய அளவிலான துப்பாக்கி கடத்தல் அம்பலம்

சிட்னியின் மத்திய கடற்கரையில் நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து, பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...