Sports5-வது முறையாக மகுடம் சூடிய Chennai Super Kings - IPL...

5-வது முறையாக மகுடம் சூடிய Chennai Super Kings – IPL 2023

-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் குஜராத்தை வீழ்த்தி 5-வது முறையாக மகுடம் சூடியது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் திகதி ஆரம்பமானது.

10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் கொண்டாட்டத்தில் லீக் மற்றும் ‘பிளே-ஓவ் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், சென்னை சுப்பர் கிங்சும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. மகுடத்துக்கான இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற இருந்தது.

ஆனால் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் இறுதிப்போட்டி மறுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில் குஜராத்- சென்னை அணிகள் இடையிலான இறுதி போhட்டி நேற்றிரவு ஆமதாபாத்தில் இடம்பெற்றது.

இரு அணியிலும் மாற்றமில்லை. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித்தலைவர் தோனி, மழைக்குரிய அறிகுறி தென்படுவதால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதன்படி சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர்.

எச்சரிக்கையுடன் தொடங்கிய இருவருக்கும் அதிர்ஷ்டம் கைகொடுத்தது. கில் 3 ஓட்டத்தில் இருந்த போது வழங்கிய மிக எளிதான கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட கில், தேஷ்பாண்டே மற்றும் தீக்ஷனா ஓவர்களில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

மறுமுனையில் வேகம் காட்டிய சஹா 21 ஓட்டத்தில் இருந்தபோது பந்து வீசிய தீபக் சாஹருக்கு கேட்ச் செய்ய வாய்ப்பு கிட்டியது. இந்த முறையும் பிடிக்க தவறினார்.

அத்துடன் சஹா 27 ஓட்டத்தில் இரு முறை ரன்-அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்தார். கண்டம் தப்பிய இருவரும் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ஓட்டம் திரட்டி வலுவான அடித்தளம் அமைத்தனர். ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பவர்-பிளேயில் எடுக்கப்பட்ட சிறந்த ஸ்கோர் இதுவாகும்.

ஸ்கோர் 67 ஆக உயர்ந்த போது சுப்மன் கில் 39 ஓட்டங்களில் (20 பந்து, 7 பவுண்டரி) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் விக்கெட் கீப்பர் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

Latest news

NSW ஹண்டர் பகுதியில் இறந்து கிடந்த பெண் – ஒருவர் கைது

NSW Hunter பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் குடும்ப வன்முறை கொலையில் 20 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 4.45 மணியளவில் தாக்குதல் நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் வீட்டிற்கு...

ஆஸ்திரேலியாவில் திரும்பப் பெறப்பட்ட பல சீஸ் பிராண்டுகள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய கடைகளில் விற்கப்படும் பல பிராண்டு சீஸ்கள் பாக்டீரியா மாசுபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் சீஸில் லிஸ்டீரியா வைரஸ் பரவுவதே என்று ஆஸ்திரேலிய...

சர்ச்சைக்குரிய பேச்சால் இஸ்ரேலிய அமைச்சரின் ஆஸ்திரேலிய விசா ரத்து

காசா பகுதியில் உள்ள குழந்தைகளை எதிரிகள் என்று அழைத்த இஸ்ரேலிய அரசியல்வாதி Simcha Rothman, நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள யூத சமூகத்தினருடன் ஒரு...

Qantas நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த மிகப்பெரிய அபராதம்

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பணிநீக்க வழக்கில், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்திற்கு 90 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. COVID-19 தொற்றுநோய்களின்...

Qantas நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த மிகப்பெரிய அபராதம்

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பணிநீக்க வழக்கில், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்திற்கு 90 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. COVID-19 தொற்றுநோய்களின்...

மெல்பேர்ணில் திருடப்பட்ட $1 மில்லியன் மதிப்புள்ள Ferrari கார் குறித்து விசாரணை

மெல்பேர்ண் வீட்டில் இருந்து 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள Ferrari உட்பட நான்கு சொகுசு கார்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை...