Newsஏலத்தில் விடப்படும் ஹிட்லரின் பென்சில்

ஏலத்தில் விடப்படும் ஹிட்லரின் பென்சில்

-

அடோல்ப் ஹிட்லருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பென்சில் ஏலத்தில் விடப்படவுள்ளது.

குறித்த பென்சிலானது 80,000 பவுண்ட் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அடுத்த மாதமளவில் வட அயர்லந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் ஏலம் விடப்படவுள்ளது.

1941 ஆம் ஆண்டு இந்தப் பென்சிலை ஹிட்லருக்கு 52 ஆவது பிறந்த நாள் பரிசாக அவரின் நீண்ட நாள் காதலி எவா பிரான் (Eva Braun) கொடுத்தார் எனக் கூறப்படுகிறது.

அதில் ‘எவா’ என்று ஜெர்மானிய மொழியிலும் “AH” என்ற எழுத்துகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பென்சிலை 2002 ஆம் ஆண்டு ஒருவர் ஏலத்தில் வாங்கினார், இது மீண்டும் ஜூன் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள Bloomfield ஏலத்தில் மீண்டும் விற்கப்படவுள்ளது.

இதேவேளை, அதனுடன் கையெழுத்திடப்பட்ட ஹிட்லரின் படம், விக்டோரியா அரசியார் வழங்கிய கையால் எழுதப்பட்ட மன்னிப்பு ஆவணம் ஆகியவையும் ஏலம் விடப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

Latest news

பெண்களுக்கான பணிக்குத் திரும்பும் குயின்ஸ்லாந்து அரசாங்க நிதிகள்

பெண்கள் மீண்டும் பணியில் சேர உதவும் வகையில் மானியங்களை வழங்க குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, குறைந்தது 6 மாதங்களாவது வேலையில்லாமல் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட...

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புர்காவை தடை செய்வதற்கான திட்டம்

பொது இடங்களில் புர்கா மற்றும் பிற முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்ய வேண்டும் என்று செனட்டர் பவுலின் ஹான்சன் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். அவர்...

ஆஸ்திரேலியாவின் நம்பகமான நண்பராக மாற அமெரிக்கா தயார்

ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியில் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் கனிமங்களாகக் கருதப்படும் முக்கியமான கனிமங்கள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் துறையில் முதலீடு...

ஆஸ்திரேலியாவின் உலக பாரம்பரிய தளங்களுக்கு என்ன நடக்கிறது?

ஆஸ்திரேலியாவில் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்ட நான்கு இயற்கை தளங்களின் நிலை 2020 முதல் குறைந்துள்ளது. இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகள் குறைந்துவிட்டன என்பதை சர்வதேச இயற்கை...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வறுமை அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) மற்றும் ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில் (ACOSS) நடத்திய...

Qantas ஹேக்கர்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவு

Qantas வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 5.7 மில்லியன் Qantas வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...