ஒரே நிறுவனத்தில் ஒரே நிலையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசு கொண்டு வர உள்ள சட்டத்திருத்தத்துக்கு பெரிய வணிகர்களும், சிறு வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதிக அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு இது நியாயமற்றது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுரங்கம் – எரிபொருள் – கட்டுமானம் – விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், “ஒரே வேலை – ஒரே ஊதியம்” திருத்தம் என்று பிரபலமாக அறியப்படும் இந்த ஒழுங்குமுறைக்கு எதிராக தேசிய அளவிலான இயக்கத்தை நடத்த ஒரு பொதுவான உடன்பாட்டிற்கு வந்துள்ளனர்.
06 மாத அனுபவமுள்ள ஒருவருக்கும் 06 வருட அனுபவமுள்ள ஒருவருக்கும் ஒரே வேலையில் பணிபுரியும் ஒருவருக்கு ஒரே சம்பளம் வழங்குவது எவ்வளவு நியாயமானது என கேள்வி எழுப்புகின்றனர்.
இருப்பினும், ஊதிய வித்தியாசத்தை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு வலியுறுத்துகிறது.
இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், தவறான அனுமானங்களின் அடிப்படையில் வணிக உரிமையாளர்கள் ஆட்சேபனைகளை எழுப்புவதாகவும் அரசு குற்றம் சாட்டுகிறது.





